செய்திகள் :

`ஆளுநர் தலைமையில் துணை வேந்தர்கள் மாநாடு; ஜெகதீப் தன்கர் பங்கேற்பு' - மீண்டும் வெடிக்கும் சர்ச்சை

post image

தமிழ்நாட்டில் சென்னை ராஜ்பவனுக்கு அடுத்தபடியாக ஆளுநருக்கான அதிகாரப்பூர்வ மாளிகையை நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அமைத்துள்ளனர். ஆளுநர்களின் ஒய்வு மட்டுமின்றி அலுவலக பணிகள், முக்கிய ஆலோசனை கூட்டங்களும் ஊட்டி ராஜ்பவனில் நடைபெறும்.

தமிழ்நாட்டில் இயங்கி வரும் மத்திய, மாநில அரசு பல்கலைக்கழங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கான மாநாடு ஆளுநரும் பல்கலைக்கழகங்களின் வேந்தருமான கவர்னர் தலைமையில் ஒவ்வொரு ஆண்டும் ஊட்டி ராஜ்பவனில் நடைபெறுவது வழக்கம்.

ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலவர் மு.க.ஸ்டாலின்

ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஊட்டி ராஜ்பவனில் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெற்றது. கவர்னருக்கு பதிலாக தமிழ்நாட்டின் முதல்வரே பல்கலைக்கழகங்களின் வேந்தராக இனி பதவி வகிக்கலாம் என உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில் முதலமைச்சர் ஸ்டாலின் பல்கலைக்கழகங்களின் வேந்தராக அறிவிக்கப்பட்டு, துணை வேந்தர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தையும் அண்மையில் நடத்தினார்.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தமிழ்நாடு அரசு கொண்டாடி வந்த நிலையில் நிலையில், துணைவேந்தர்களுக்கான நியமன அதிகாரம் மட்டுமே முதலமைச்சருக்கு இருப்பதாகவும், கவர்னரே வேந்தராக தொடர்கிறார் என்றும், ஏப்ரல் 25, 26 ஆகிய தேதிகளில் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் துணைவேந்தர்களுக்கான மாநாடு கவர்னர் தலைமையில் நடைபெறும். சிறப்பு விருந்தினராக குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்க இருப்பதாகவும் ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

குடியரசுத் துணைத் தலைவருடன் கவர்னர்

இதனிடையே டெல்லி சென்ற ஆளுநர் ரவி, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்திருக்கிறார். ஆளுநர் ரவி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஜெகதீப் தன்கர் கடுமையாக விமர்சித்திருந்தார்.

குடியரசுத் தலைவர் சட்டத்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதிக்க கூடாது என ஜெகதீப் தன்கர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஜெகதீப் தன்கர் விமர்சனத்துக்கு திமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்ட்டது. இந்த நேரத்தில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தமிழ்நாடு பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்
குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்த ஆளுநர் ரவிக்கு அதிகாரம் இல்லை என இதற்கு  திமுக உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆளுநர் ரவி நடத்தும் இந்த மாநாட்டால் மீண்டும் தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. 

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

மதிமுக: "வைகோவின் முகம் பதித்த மோதிரம் என் அடையாளம்" - அனுபவம் பகிரும் மல்லை சத்யா

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்தெழுந்த நாளை ஈஸ்டர் திருநாளாக மக்கள் கொண்டாடி வருகிறார்கள். ம.தி.மு.க துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா ஈஸ்டர் திருநாளுக்கு வாழ்த்து தெரிவித்து, வாட்டிகன் நகர... மேலும் பார்க்க

சென்னை: முதல்முறையாக ஏசி வசதியுடன் புறநகர் ரயில் சேவை - இன்று முதல் தொடக்கம்; கட்டணம் எவ்வளவு?

சென்னையில் முதல்முறையாக, சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரையில் ஏசி வசதியுடன் கூடிய புறநகர் மின்சார ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.கடந்த மார்ச் மாதம் இதற்கான சோதனை ஓட்டம்... மேலும் பார்க்க

NTK: `சாட்டை சேனலுக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை’ - சீமானின் `திடீர்’ கண்டிப்பின் பின்னணி!

நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் துரைமுருகன் நடத்திவரும் `சாட்டை` யூட்யூப் சேனலுக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என அறிவித்திருக்கிறார் சீமான். முன்னணி நிர்வாகிகளுக்கு இடையேயான பனிப்போர்தா... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: பூங்காவில் மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம்; கவுன்சிலரின் கணவர் மீது புகார்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சியின் 4வது வார்டு பகுதியாகிய பாபு நகரில் உள்ள பூங்கா, கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு மரங்களை வளர்த்து சிறுகாடாக மாற்றப்பட்டிருந்தது. இதில் நீர் மருது, புரசை, தே... மேலும் பார்க்க

வேலூர்: பள்ளிக்கூடங்களுக்கு அருகிலேயே செயல்படும் டாஸ்மாக் கடை.. இடம் மாற்றக் கோரும் சமூக ஆர்வலர்கள்!

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பகுதியில் சல்லாபுரி அம்மன் கோயில் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின... மேலும் பார்க்க

புதிதாக கட்டப்பட்ட பாளையங்கோட்டை சந்தை; திறக்கப்படுவது எப்போது? - காத்திருக்கும் வியாபாரிகள்!

பாளையங்கோட்டை புதிய மார்க்கெட் எப்போது திறக்கப்படும் என்பதை பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட், நெல்லை மக்... மேலும் பார்க்க