செய்திகள் :

வேலூர்: பள்ளிக்கூடங்களுக்கு அருகிலேயே செயல்படும் டாஸ்மாக் கடை.. இடம் மாற்றக் கோரும் சமூக ஆர்வலர்கள்!

post image

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பகுதியில் சல்லாபுரி அம்மன் கோயில் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின் அருகிலேயே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த இரு பள்ளிகளுக்கும் அருகிலேயே டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. 1116 என்ற கடை எண் கொண்ட இந்த டாஸ்மாக் கடை, பள்ளிக்கு அருகிலேயே அமைந்துள்ளதால் படிக்கும் மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இந்த டாஸ்மாக் கடையில் மது பிரியர்கள் மதுபானங்களை வாங்கி அங்கேயே சாலையின் ஓரத்தில் அமர்ந்து குடிப்பதால், அந்த வழியாகச் செல்லும் மாணவ மாணவிகள் தினமும் அச்சத்துடனே கடந்து செல்வதாக பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இந்த டாஸ்மாக் கடையை உடனடியாக இடமாற்றம் செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

பள்ளி

 இது குறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் ஒருவர், “கடந்த சில வருடங்களாக இந்த டாஸ்மாக் மதுபான கடை பள்ளிக்கு அருகிலேயே நடத்தப்பட்டு வருகிறது. ஒடுகத்தூர் பேரூராட்சி பகுதியில் இருந்த இந்த டாஸ்மாக் கடையை பள்ளிக்கு அருகிலேயே மாற்றம் செய்து விட்டனர். இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காலை முதல் இரவு வரை இந்த டாஸ்மாக் கடையில் மதுபானங்களை வாங்கி இங்கே உள்ள சாலையின் ஓரத்திலேயே அமர்ந்து மது பிரியர்கள் குடிக்கின்றனர்.

பள்ளி மாணவர்கள்

இவர்கள் பொதுவெளியில் அமர்ந்து குடிப்பதினால் இந்த சாலையை பயன்படுத்தும் மாணவ மாணவிகள் மற்றும் பெண்கள் ஆகியோர் மிகுந்த அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். இதனால் பள்ளி மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் இடைஞ்சலாக இருக்கும் இந்த டாஸ்மாக் கடையினை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.

டாஸ்மாக் கடை

மேலும் இந்த பள்ளிக்கு அருகில் இருக்கும் கடைகளில் போதை பொருள்கள் விற்பனை செய்வதனை தடுக்க உரிய அலுவலர்கள் சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார். 

பள்ளி மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் இடைஞ்சலாக இருக்கும் இந்த டாஸ்மாக் கடையினை பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதிகள் இல்லாத வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. 

சென்னை: முதல்முறையாக ஏசி வசதியுடன் புறநகர் ரயில் சேவை - இன்று முதல் தொடக்கம்; கட்டணம் எவ்வளவு?

சென்னையில் முதல்முறையாக, சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரையில் ஏசி வசதியுடன் கூடிய புறநகர் மின்சார ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.கடந்த மார்ச் மாதம் இதற்கான சோதனை ஓட்டம்... மேலும் பார்க்க

NTK: `சாட்டை சேனலுக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை’ - சீமானின் `திடீர்’ கண்டிப்பின் பின்னணி!

நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் துரைமுருகன் நடத்திவரும் `சாட்டை` யூட்யூப் சேனலுக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என அறிவித்திருக்கிறார் சீமான். முன்னணி நிர்வாகிகளுக்கு இடையேயான பனிப்போர்தா... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: பூங்காவில் மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம்; கவுன்சிலரின் கணவர் மீது புகார்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சியின் 4வது வார்டு பகுதியாகிய பாபு நகரில் உள்ள பூங்கா, கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு மரங்களை வளர்த்து சிறுகாடாக மாற்றப்பட்டிருந்தது. இதில் நீர் மருது, புரசை, தே... மேலும் பார்க்க

புதிதாக கட்டப்பட்ட பாளையங்கோட்டை சந்தை; திறக்கப்படுவது எப்போது? - காத்திருக்கும் வியாபாரிகள்!

பாளையங்கோட்டை புதிய மார்க்கெட் எப்போது திறக்கப்படும் என்பதை பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட், நெல்லை மக்... மேலும் பார்க்க

`Wifi முதல் மின்சார உற்பத்திவரை' - இந்தியாவின் முதல்`Smart Village' இப்போது எப்படி இருக்கிறது?

``காலேஜ் படிச்சிட்டு இருக்குற இவன் எதுக்கு பஞ்சாயத்து தலைவர போய் பாக்குறான்... அவர் என்கிட்ட வந்து 'என்னப்பா உன் புள்ளை என்கிட்ட கேள்விலாம் கேக்குறான்... என்னனு கவனிக்க மாட்டியானு' மொறக்கிறாரு..." என ... மேலும் பார்க்க

TASMAC Raid: "பொய் தகவல் கூறி வழக்கை திசைதிருப்ப முயற்சி" - தமிழக அரசை குற்றம்சாட்டும் அமலாக்கத்துறை

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் மற்றும் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்குகள், இன்று நீதி... மேலும் பார்க்க