செய்திகள் :

காங்கிரஸ் தலைவர் மீது காரை ஏற்றி கொன்ற பாஜக தொண்டர்: முன்பகை காரணமா?

post image

சத்தீஸ்கரின் கொண்டகான் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தின் மீது பாஜக தொண்டர் ஒருவர் காரை மோதியதில் காங்கிரஸ் தலைவர் உயிரிழந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை மாலை டோக்ரி குடா கிராமத்திற்கு அருகே இந்த விபத்து நடைபெற்றதாகவும், விபத்து தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டவரை போலீஸார் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில்,

சத்தீஸ்கரி கொண்டகான் மாவட்டத்தில் காங்கிரஸ் இளைஞரணி தலைவராகவும், முல்முலா கிராம பஞ்சாயத்தின் தலைவராகவும் இருந்தவர் ஹேமந்த் போயர் (30). இவரும் இவரது உறவினர் பெண் ஒருவரும் இருசக்கர வாகனத்தில் உள்ளூர் சந்தைக்குச் சென்றுகொண்டிருந்தபோது. பாஜக ஊழியரான புரேந்திர கௌஷிக் தனது காரை இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியுள்ளார்.

காயமடைந்தவர்களை உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குச் சிகிச்சை பலனின்றி போயர் இறந்தார், உறவினர் பெண் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கௌஷிக் முல்முலா கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு போயரிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து பஞ்சாயத்துத் தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட பகை காரணமாக கௌஷிக் அவரைக் கொன்றதாக போயாரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

போயாரின் குடும்பத்தினரும் காங்கிரஸ் தொண்டர்களும் வெள்ளிக்கிழமை இரவு கௌஷிக்கை கைது செய்யக் கோரி காவல் நிலையத்தில் கூடினர். போயாரின் கொலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகக் கூறி மாவட்ட மருத்துவமனை மற்றும் தேசிய நெடுஞ்சாலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் முற்றுகைப் போராட்டத்தையும் நடத்தினர்.

உள்ளூர் மக்கள், காங்கிரஸ் தொண்டர்களின் தீவிர போராட்டங்களைத் தொடர்ந்து போலீஸார் பாஜக தொண்டரான கௌசீக்கை கைது செய்தனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது.

போதைப்பொருள் வழக்கு: குட் பேட் அக்லி பட நடிகருக்கு ஜாமீன்

போதைப்பொருள் வழக்கில் கைதான குட் பேட் அக்லி பட நடிகர் ஷைன் டாம் சாக்கோவை எர்ணாகுளம் நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்துள்ளது.கொச்சியில் உள்ள ஹோட்டலில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தியபோ... மேலும் பார்க்க

ஹிந்தி கட்டாயமாக்கப்படுவதை அனுமதிக்கமாட்டோம்! - உத்தவ் தாக்கரே

ஹிந்தியை கட்டாயமாக்க மகாராஷ்டிரத்திலும் எதிர்ப்பு வலுத்துள்ளது.மகாராஷ்டிரத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020-இன்கீழ், மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழ... மேலும் பார்க்க

ஆர்பிஐ தங்க கையிருப்பின் மதிப்பு சுமார் ரூ.12,000 கோடி அதிகரிப்பு

நாட்டின் மத்திய ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு மதிப்பு ஏப்ரல் 11ஆம் தேதியுடன் முடிந்த ஒரு வாரத்தில் ரூ.12,000 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது. பொருளாதார நிலையற்றத் தன்மை, உலக நாடுகளிடைய ஏற்பட்டிருக்க... மேலும் பார்க்க

தில்லி கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு

தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு தில்லியில் முஸ்தபாஃபாத்தில் குடியிருப்புக் கட்டடம் ஒன்று சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்து விபத்த... மேலும் பார்க்க

நீட் முதுநிலை தேர்வு: மருத்துவர்கள் கோரிக்கை ஏற்கப்படுமா?

ஜூன் 15-ஆம் தேதி நீட் முதுநிலை தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு காலை 9 - 12.30 மணிவரை, அதனைத்தொடர்ந்து அதே நாளில் மாலை 3.30 - 7 மணிவரை நடைபெற உள்ளது. இந்தநிலையில், இரு தொகுதிகளாக நீட் தேர்வு நடத்த வேண்... மேலும் பார்க்க

நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த நபர் கைது

நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள செக்டார் 12-ஐ சேர்ந்தவர் அனூப் மன்சந்தா. இவர் மதுபோதையில் தனது மனைவியி... மேலும் பார்க்க