செய்திகள் :

சென்னை: 12 வயதில் மாயமான சிறுமி 18 வயதில் மீட்கப்பட்டது எப்படி?

post image

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரம்யா (பெயர் மாற்றம்). இவர் லேப் ஒன்றில் உதவியாளராக இருந்து வருகிறார். இவரின் 12 வயதான மகள் அரும்பாக்கம் பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 1.11.2018-ம் தேதி பள்ளிக்குச் சென்றவர் பின்னர் வீடு திரும்பிவரவில்லை. அதனால் மாணவியின் அம்மா அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் சிறுமி மாயம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

ஆனால், சிறுமி குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அதனால் அந்த வழக்கு அப்படியே கிடப்பில் போடப்பட்டது. ஆனால் மகளை தேடும் முயற்சியை ரம்யா கைவிடவில்லை. தன்னுடைய மகள் படித்த பள்ளி, அவளின் தோழிகள் என ஒவ்வொருவரிடமும் விசாரித்துக் கொண்டே இருந்தார்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம்

இதற்கிடையில் மாயமான சிறுமியின் புகைப்படத்தை அரும்பாக்கம் போலீஸார் அனைத்து மாவட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பியும் விசாரித்தனர். இந்தச் சமயத்தில்தான் 2018-ல் காணாமல் போன ரம்யாவின் மகள், கடலூரில் உள்ள காப்பகம் ஒன்றில் இருப்பதாக அரும்பாக்கம் காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக சிறுமியின் குடும்பத்தினருக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். அதனால் மகிழ்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு கடலூரில் உள்ள காப்பகத்துக்கு போலீஸார் சென்றனர். அங்கு 2018-ல் மாயமான 12 வயதான சிறுமி, 18 வயது இளம்பெண்ணாக வளர்ந்திருந்தாள்.

தன்னுடைய மகளைப் பார்த்த ரம்யாவும் அம்மாவைப் பார்த்த அந்தப் பெண்ணும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து ஆனந்த கண்ணீர்விட்டனர். அந்தப் பாச காட்சியைப் பார்த்தவர்களின் கண்கள் குளமாகின.

இதையடுத்து `இவள்தான் காணாமல் போன என் மகள்' என ரம்யா, போலீஸாரிடம் சொல்ல, சட்டப்படி அவரை காப்பகத்திலிருந்து அழைத்து வர அரும்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் சட்டப்படி நடவடிக்கை எடுத்தார். அதைத் தொடர்ந்து அந்த இளம்பெண்ணை, அவரின் பெற்றோரிடம் போலீஸார் ஒப்படைத்தனர். அதனால் அந்தக் குடும்பமே மகிழ்ச்சியடைந்தது. மகளோடு வீடு திரும்பிய ரம்யா, போலீஸாருக்கு நன்றிகளை தெரிவித்தார்.

இதுகுறித்து அரும்பாக்கம் போலீஸாரிடம் சிறுமியை மீட்டது எப்படி என பேசினோம். ``மாயமான சிறுமி கடலூர் காப்பகத்திலிருக்கும் தகவலை எங்களுக்கு ஒருவர் தெரிவித்தார். அதன்அடிப்படையில்தான் சென்னையிலிருந்து ஒரு போலீஸ் டீம் கடலூருக்குச் சென்று விசாரித்தது. காணாமல் போன சிறுமியின் புகைப்படமும் அவரின் அங்க அடையாளங்கள் மட்டுமே எங்களிடம் ஆதாரமாக இருந்தது. அந்த அடையாளங்கள் அடிப்படையில்தான் மாயான சிறுமி கடலூர் காப்பகத்திலிருப்பதை உறுதிப்படுத்தினோம். 12 வயதில் சிறுமி காணாமல் போனபோது அவருக்கு ஞாபக மறதி இருந்திருக்கிறது. அதனால்தான் தன்னுடைய குடும்ப விவரங்களை அவரால் காப்பகத்தில் உள்ளவர்களிடம் சொல்ல தெரியவில்லை. அதனால் காப்பகத்திலிருப்பவர்களும் சிறுமியை பெற்றோர் இல்லாதவர் என்று கருதியே அங்கு இத்தனை ஆண்டுகள் தங்க வைத்திருக்கிறார்கள். இதையடுத்து சென்னையில் மகளைத் தேடிக் கொண்டிருக்கும் ரம்யாவுக்கு தகவல் தெரிவித்து அவரை கடலூருக்கு அழைத்துச் சென்றோம். ரம்யாவும் தன்னுடைய மகளை அடையாளம் காட்டினார். பின்னர் சட்ட நடவடிக்கைகளை முடித்து இளம்பெண்ணை அவரின் அம்மாவுடன் அனுப்பி வைத்திருக்கிறோம்.

எத்தனையோ குற்ற வழக்குகளில் சிறப்பாக புலனாய்வு செய்திருந்தாலும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மாயமான சிறுமியை மீட்டது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது" என்றார்.

இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அரும்பாக்கம் போலீஸாரை, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் வெகுவாக பாராட்டினார்.

சென்னை: ரூ.17 லட்சம், 4 செல்போன்கள் - மாப்பிள்ளை என அழைத்து ஏமாற்றிய மணமகளின் அப்பா!

சென்னை வில்லிவாக்கம் நியூ ஆவடி சாலையில் வசித்து வருபவர் ஜெயபிரகாஷ் (31). இவர் வில்லிவாக்கம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு ஜெயபிரகாஷ், மணமகள் தேவை என் திருமண தக... மேலும் பார்க்க

தலைக்கேறிய மதுபோதை... தந்தையை கட்டையால் அடித்துக் கொன்ற மகன்! - திருச்சி அதிர்ச்சி

திருச்சி, திருவானைக்காவல் அழகிரிபுறம் அருகே உள்ள ஏ.யூ.டி நகரில் வசித்து வந்தவர் சோமசுந்தரம் (வயது: 45). இவர், சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மகன் மோகன்ர... மேலும் பார்க்க

டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும் இந்த Lady Don யார்?

டெல்லி ஷீலம்பூர் பகுதியில் சமீபத்தில் குனால்(17) என்ற வாலிபர் பட்டப்பகலில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். நேற்று முன் தினம் குனால் தனது வீட்டில் இருந்து பால் வாங்குவதற்காக வெளியில் கிளம்பிய போ... மேலும் பார்க்க

மணமேடையில் அதிர்ந்த மணமகன் - மணப்பெண் என காட்டப்பட்டவரின் தாயாரை திருமணம் செய்து வைக்க முயற்சியா?

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள பிரம்புரி என்ற இடத்தைச் சேர்ந்தவர் மொகமத் அசிம்(22). அசிம் பெற்றோர் இறந்துவிட்டனர். இதனால் தனது பூர்வீக வீட்டில் தனது சகோதரர் நதீமுடன் வசித்து வந்தார். இவருக்கு அவ... மேலும் பார்க்க

கேரளா: "பொய்யாக பாலியல் புகார் அளித்தேன்" - 7 ஆண்டுக்குப் பின் மன்னிப்பு கேட்ட மாணவி; நடந்தது என்ன?

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கருநாகப்பள்ளியை அடுத்த குறுப்பந்தறவு பகுதியில் பாராமெடிக்கல் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டுவந்தது.அந்த கல்வி நிறுவனத்தைக் கோட்டயம் மதுரவேலி பகுதியைச் சேர்ந்த சி.டி.ஜோமோ... மேலும் பார்க்க

பேத்தி மரணத்தில் சந்தேகம்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்; கலெக்டர் அலுவலகத்தில் புகாரை ஒட்டிய பெரியவர்!

மதுரை பந்தல்குடி பகுதியைச் சேர்ந்தவர் மாயழகன். இவரது பேத்தி ரம்யா கிருஷ்ணன், ரீபன் என்பவரைத் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி வீட்டில் நடந்த வாக்கு... மேலும் பார்க்க