செய்திகள் :

சென்னை: ரூ.17 லட்சம், 4 செல்போன்கள் - மாப்பிள்ளை என அழைத்து ஏமாற்றிய மணமகளின் அப்பா!

post image

சென்னை வில்லிவாக்கம் நியூ ஆவடி சாலையில் வசித்து வருபவர் ஜெயபிரகாஷ் (31). இவர் வில்லிவாக்கம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு ஜெயபிரகாஷ், மணமகள் தேவை என் திருமண தகவல் இணையதளத்தில் பதிவு செய்தார். அதைப் பார்த்து பிரபு என்பவர் ஜெயபிரகாஷை தொடர்பு கொண்டு வரன் தொடர்பாக பேசினார். பின்னர் ஜெயபிரகாஷ் தன்னுடைய போட்டோவை பிரபுக்கு அனுப்பி வைத்தார். அதைப்போல பிரபுவும் தன்னுடைய மகள் தாரணியின் போட்டோவை ஜெயபிரகாஷுக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து திருமணம் குறித்து ஜெயபிரகாஷ் குடும்பத்தினருடன் மணமகளின் அப்பா பிரபு, அவரின் மனைவி ஜெயந்தி, தாரணியின் சகோதரி சரண்யா ஆகியோர் போனில் பேசி வந்தனர். பின்னர் தாரணியை ஜெயபிரகாஷுக்கு திருமணம் செய்து கொடுக்க இரண்டு குடும்பத்தினரும் பேசி முடிவெடுத்தனர். அதன் பிறகு ஜெயபிரகாஷும் தாரணியும் போனில் பேசி வந்தனர்.

Wedding - திருமணம்

இதையடுத்து ஜெயபிரகாஷை மாப்பிள்ளை, மாப்பிள்ளை என உரிமையோடு தாரணியின் குடும்பத்தினர் அழைத்து வந்தனர். அதனால் ஜெயபிரகாஷும் தாரணியின் குடும்பத்தினர் மீது பாசமாகவே இருந்துவந்தார். அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய தாரணியின் குடும்பத்தினர் ஜெயபிரகாஷிடம் அவசர தேவை என அவ்வப்போது கூறி பணம், செல்போன், புதிய வீடு குடியிருக்க அட்வான்ஸ் என கேட்டு வாங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் ஜெயபிரகாஷ், 17 லட்சம் ரூபாய் வரை கொடுத்திருக்கிறார். அதோடு தாரணியின் குடும்பத்தினருக்கு 4 செல்போன்களையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார் ஜெயபிரகாஷ்.

இதையடுத்து தாரணியை உங்களுக்குத் திருமணம் செய்து கொடுக்க முடியாது என ஜெயபிரகாஷிடம் தாரணியின் அப்பா பிரபு தெரிவித்தார். அதனால் ஷாக்காகிப் போன ஜெயபிரகாஷ், தாரணி குடும்பத்தினரை நேரில் சந்திக்கச் சென்றார். அங்கு வீடு பூட்டியிருந்தது. செல்போன்களும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து ஜெயபிரகாஷ், திருமண ஆசையை காண்பித்து பணம் வாங்கி தன்னை ஏமாற்றி விட்டதாக தாரணியின் குடும்பத்தினர் மீது கடந்த 2024-ல் அமைந்தகரை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து தாரணியின் குடும்பத்தினரை தேடிவந்தனர். இந்த நிலையில் அமைந்தகரையில் உள்ள ஆண்கள் விடுதியில் தலைமறைவாக இருந்த பிரபுவை போலீஸார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிரபுவை சிறையில் அடைத்தனர்.

கைது

இது குறித்து அமைந்தகரை போலீஸார் கூறுகையில், ``கைது செய்யப்பட்ட பிரபுவும் அவரின் குடும்பத்தினரும் கூட்டாக சேர்ந்து ஜெயபிரகாஷிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதில் பிரபுவை கைது செய்துவிட்டோம். அவரிடம் விசாரித்தபோது பிரபுவின் குடும்பத்தினர் தலைமறைவாக இருக்கும் இடம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. இதற்கிடையில் ஜெயபிரகாஷிக்கு திருமணம் செய்து கொடுப்பதாக வாக்குறுதி கொடுக்கப்பட்ட தாரணிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்து விட்டதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. இந்த வழக்கில் தாரணியும் குற்றம்சாட்டப்பட்டவர் என்பதால், அவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை பாயும். குடும்பத்தினரோடு தங்கியிருந்தால் அனைவரும் மாட்டிக் கொள்வோம் எனக் கருதி பிரபு மட்டும் ஆண்கள் விடுதியில் தங்கியிருந்து கிடைத்த வேலைகளைச் செய்து வந்திருக்கிறார். தற்போது பிரபு சிக்கியதையடுத்து அடுத்து அவரின் குடும்பத்தினரை எளிதில் கைது செய்துவிடுவோம்" என்றனர்.

தலைக்கேறிய மதுபோதை... தந்தையை கட்டையால் அடித்துக் கொன்ற மகன்! - திருச்சி அதிர்ச்சி

திருச்சி, திருவானைக்காவல் அழகிரிபுறம் அருகே உள்ள ஏ.யூ.டி நகரில் வசித்து வந்தவர் சோமசுந்தரம் (வயது: 45). இவர், சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மகன் மோகன்ர... மேலும் பார்க்க

சென்னை: 12 வயதில் மாயமான சிறுமி 18 வயதில் மீட்கப்பட்டது எப்படி?

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரம்யா (பெயர் மாற்றம்). இவர் லேப் ஒன்றில் உதவியாளராக இருந்து வருகிறார். இவரின் 12 வயதான மகள் அரும்பாக்கம் பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த... மேலும் பார்க்க

டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும் இந்த Lady Don யார்?

டெல்லி ஷீலம்பூர் பகுதியில் சமீபத்தில் குனால்(17) என்ற வாலிபர் பட்டப்பகலில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். நேற்று முன் தினம் குனால் தனது வீட்டில் இருந்து பால் வாங்குவதற்காக வெளியில் கிளம்பிய போ... மேலும் பார்க்க

மணமேடையில் அதிர்ந்த மணமகன் - மணப்பெண் என காட்டப்பட்டவரின் தாயாரை திருமணம் செய்து வைக்க முயற்சியா?

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள பிரம்புரி என்ற இடத்தைச் சேர்ந்தவர் மொகமத் அசிம்(22). அசிம் பெற்றோர் இறந்துவிட்டனர். இதனால் தனது பூர்வீக வீட்டில் தனது சகோதரர் நதீமுடன் வசித்து வந்தார். இவருக்கு அவ... மேலும் பார்க்க

கேரளா: "பொய்யாக பாலியல் புகார் அளித்தேன்" - 7 ஆண்டுக்குப் பின் மன்னிப்பு கேட்ட மாணவி; நடந்தது என்ன?

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கருநாகப்பள்ளியை அடுத்த குறுப்பந்தறவு பகுதியில் பாராமெடிக்கல் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டுவந்தது.அந்த கல்வி நிறுவனத்தைக் கோட்டயம் மதுரவேலி பகுதியைச் சேர்ந்த சி.டி.ஜோமோ... மேலும் பார்க்க

பேத்தி மரணத்தில் சந்தேகம்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்; கலெக்டர் அலுவலகத்தில் புகாரை ஒட்டிய பெரியவர்!

மதுரை பந்தல்குடி பகுதியைச் சேர்ந்தவர் மாயழகன். இவரது பேத்தி ரம்யா கிருஷ்ணன், ரீபன் என்பவரைத் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி வீட்டில் நடந்த வாக்கு... மேலும் பார்க்க