செய்திகள் :

'அண்ணாமலை, புதிய எழுச்சியை கொடுத்தவர்' - நயினார் வரவேற்பு நிகழ்வில் வானதி சீனிவாசன்

post image

பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன் கோவை வருகை புரிந்தார். அவருக்கு கோவை பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் பேசும்போது,

வானதி சீனிவாசன்

“பொதுவாக பொறுப்பு கிடைத்தால் கையில் சாலுடன், பிற தலைவர்களை பார்க்க போவார்கள். நம் தலைவர் நயினார் நாகேந்திரன் தொண்டர்களை பார்க்க வந்துள்ளார்.

முன்னாள் தலைவர்கள் உழைப்பை..!

பாஜகவை பொறுத்தவரை யார் கட்சியை முன்னெடுத்து செல்கின்றனர் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இரட்டை இலக்கத்தில் சட்டமன்ற உறுப்பினர்களை அனுப்ப போகும் மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் இருப்பார். சி.பி ராதாகிருஷ்ணன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தாமரையை வளர்க்க அரும்பாடுபட்டனர். 

பாஜக நிகழ்ச்சி

இன்று இருக்கக் கூடிய தலைவர்கள் முன்னாள் தலைவர்கள் உழைப்பை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அண்ணாமலை, புதிய எழுச்சியை கொடுத்தவர். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியால் புதிய கருத்துருகளை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை கொண்டு வந்தார். 

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை திமுக கூட்டணிக்கு, எதுவுமே இல்லாமல் பெரிய பூஜ்ஜியத்தை மக்கள் பரிசாக அளித்தார்கள். அடுத்து வரக் கூடிய சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தலிலும் கோவை மாவட்டம் திமுகவுக்கு பூஜ்ஜியத்தை பரிசாக பரிசளிக்க வேண்டும்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

அந்த இலக்கை நோக்கி நாம் அனைவரும் பணி செய்ய வேண்டும். நயினார் நாகேந்திரன் காலகட்டம் சிறப்பாக அமைய வேண்டும் என்று என்னுடைய வாழ்த்துகளை பகிர்ந்து கொள்கிறேன்.” என்றார்.

'காங்கிரஸின் உறுதி பாஜகவிற்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது' - டி.ஆர் பாலு

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு திமுக பொருளாளர் டி.ஆர் பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "ஒன்றிய பா.ஜ.க. அரச... மேலும் பார்க்க

'அதிமுக போராட்டத்திற்கு கண்ணீர் அஞ்சலி' - சீமான் பதில்

அதிமுகவின் நீட் போராட்டம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சீமான் அளித்த பதில்..."அதிமுகவின் போராட்டத்திற்கு நான் வேண்டுமானால் ஒரு கண்ணீர் அஞ்சலி ... மேலும் பார்க்க

'கத்தி படிக்க வேண்டிய பள்ளிக்கூடத்திற்கு மாணவர்கள் கத்தி கொண்டு வருகிறார்கள்' - தமிழிசை

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பற்றி முன்னாள் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தப்போது பேசியதாவது..."தமிழ்நாட்டில் மக்கள் விரோத ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. இன்று திருச... மேலும் பார்க்க

"பாஜகவிற்கு விசிக தான் துருப்புச் சீட்டு; பாஜகவின் ஒரே நிலைபாடு இதுதான்!" - திருமா சொல்வது என்ன?

அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இப்போது கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள், தேர்தல் வேலைகள் என தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பரபரப்பாகி உள்ளன. இந்த நிலையில், கூட்டணி குறித்து... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் பரபரக்கும் நீட் விவகாரம்; 'தைரியமிருந்தால்...' அதிமுகவிற்கு துரைமுருகன் சவால்

அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. சமீபத்தில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகி உள்ளது. பாஜகவின் மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் தமிழ்நாட்டில் நீட... மேலும் பார்க்க

மதிமுக: "நான் அவரைக் காயப்படுத்தியிருந்தால் அதற்கு வருந்துகிறேன்" - மல்லை சத்யா சொல்வது என்ன?

மதிமுக கட்சியின் முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக திருச்சி எம்.பி.யும் வைகோவின் மகனுமான துரை வைகோ நேற்று (ஏப்ரல் 19) அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. துரை வைக... மேலும் பார்க்க