செய்திகள் :

மதிமுக: "நான் அவரைக் காயப்படுத்தியிருந்தால் அதற்கு வருந்துகிறேன்" - மல்லை சத்யா சொல்வது என்ன?

post image

மதிமுக கட்சியின் முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக திருச்சி எம்.பி.யும் வைகோவின் மகனுமான துரை வைகோ நேற்று (ஏப்ரல் 19) அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

துரை வைகோவுக்கும், கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே ஏற்படும் கருத்து மோதல்களால்தான் துரை வைகோ ராஜினாமா செய்கிறார் என்று தகவல்கள் வெளியானது.

மதிமுக
மதிமுக

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 20) மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நடந்த ஆலோசனைக்குப் பிறகு மதிமுக முதன்மைச் செயலர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்த துரை வைகோ, தமது முடிவை வாபஸ் பெற்றிருக்கிறார்.

இதனிடையே நிர்வாகக்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து மல்லை சத்யா பேசியிருக்கிறார்.

"என் அரசியல் முகவரியாக விளங்கிக் கொண்டிருக்கிற, குடத்திலிட்ட விளக்காக இருந்த என்னைக் குன்றின் மேல் வைத்து அழகு பார்க்கும் அன்புத் தலைவர் வைகோ சொன்னதுதான் இங்கு நடந்தது.

மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அந்தப் பதவியில் நீடிக்க வேண்டும்.

என்னுடைய நடவடிக்கைகள் அவரைக் காயப்படுத்தி இருக்குமேயானால் அதற்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன். நீங்கள் தொடர்ந்து கழகத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனச் சொல்லி இருக்கிறேன். அவரும் அதை ஏற்று பரிசீலனைச் செய்வதாகச் சொல்லி இருக்கிறார்.

மதிமுக
மதிமுக

இணைந்த கைகளுக்கு எப்போதுமே வலிமை அதிகம். நாங்கள் இணைந்து இருப்போம். மனிதன் பலகீனமானவன். ஒரு காற்று கீழே தள்ளிவிடும். கல் கூட கீழே இடற வைத்துவிடும். ஆனால் மனிதர்கள் பலமானவர்கள். பலமான மனிதர்கள் மலையைக் கூட உடைத்தெறியக் கூடிய சக்தி படைத்தவர்கள்.

நானும் சகோதரர் துரை வைகோவும் இணைந்து, லட்சியத் தலைவர் வைகோ கண்ட கனவை நிறைவேற்ற உறுதுணையாக இருப்போம்" என்றுத் தெரிவித்திருக்கிறார். 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

'காங்கிரஸின் உறுதி பாஜகவிற்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது' - டி.ஆர் பாலு

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு திமுக பொருளாளர் டி.ஆர் பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "ஒன்றிய பா.ஜ.க. அரச... மேலும் பார்க்க

'அதிமுக போராட்டத்திற்கு கண்ணீர் அஞ்சலி' - சீமான் பதில்

அதிமுகவின் நீட் போராட்டம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சீமான் அளித்த பதில்..."அதிமுகவின் போராட்டத்திற்கு நான் வேண்டுமானால் ஒரு கண்ணீர் அஞ்சலி ... மேலும் பார்க்க

'கத்தி படிக்க வேண்டிய பள்ளிக்கூடத்திற்கு மாணவர்கள் கத்தி கொண்டு வருகிறார்கள்' - தமிழிசை

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பற்றி முன்னாள் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தப்போது பேசியதாவது..."தமிழ்நாட்டில் மக்கள் விரோத ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. இன்று திருச... மேலும் பார்க்க

"பாஜகவிற்கு விசிக தான் துருப்புச் சீட்டு; பாஜகவின் ஒரே நிலைபாடு இதுதான்!" - திருமா சொல்வது என்ன?

அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இப்போது கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள், தேர்தல் வேலைகள் என தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பரபரப்பாகி உள்ளன. இந்த நிலையில், கூட்டணி குறித்து... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் பரபரக்கும் நீட் விவகாரம்; 'தைரியமிருந்தால்...' அதிமுகவிற்கு துரைமுருகன் சவால்

அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. சமீபத்தில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகி உள்ளது. பாஜகவின் மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் தமிழ்நாட்டில் நீட... மேலும் பார்க்க

"துரையும் சத்யாவும் மனம் திறந்து பேசுனாங்க; இனி.." - மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்துக்குப் பின் வைகோ

ம.தி.மு.க கட்சியின் முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக திருச்சி எம்.பி.யும் வைகோவின் மகனுமான துரை வைகோ நேற்று( ஏப்ரல் 19) அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. துரை ... மேலும் பார்க்க