செய்திகள் :

தலித் இளைஞர் மீது சிறுநீர் கழித்துத் தாக்கிய இருவர் மீது வழக்கு!

post image

ராஜஸ்தானில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் மீது இருவர் சிறுநீர் கழித்துத் தாக்கி துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமண ஊர்வலத்தைப் பார்த்ததற்காக, மாற்று சமூகத்தைச் சேர்ந்த இருவர் இளைஞரை தனியாக அழைத்துச் சென்று ஆடைகளை அவிழ்த்து பாலியல் வன்கொடுமையிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதனை விடியோ பதிவு செய்த அவர்கள், இச்சம்பவம் குறித்து வெளியே கூறினால் விடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டியுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் சிகர் மாவட்டத்தின் ஃபதேபூர் பகுதியைச் சேர்ந்த, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர், மாற்று சமூகத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களால் சாதிய வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

ஏப். 8ஆம் தேதி நடைபெற்ற இச்சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் ஏப். 16ஆம் தேதி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

இது குறித்து காவல் துறை துணை ஆய்வாளர் அரவிந்த் குமார் கூறுகையில்,

’’புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று, அவரின் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’’ எனக் குறிப்பிட்டார்.

புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குடியிருப்பு பகுதி அருகே நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியை, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் பார்த்துள்ளார். இதனைக் கண்ட மாற்று சமூகத்தைச் சேர்ந்த இருவர் அந்த இளைஞரைத் தனியாக அழைத்து வந்து, அவரை அமரச் செய்து அவர் மீது சிறுநீர் கழித்துள்ளனர்.

மேலும், ஆடைகளைக் கழற்றி செயற்கையாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சாதிய பெயரைச் சொல்லி கடும் சொற்களைப் பயன்படுத்தியதோடு மட்டுமின்றி, அவரின் பிறப்புறுப்பில் கடுமையாகத் தாக்கியுள்ளனர் எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்ட பலர், பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

ராஜஸ்தானின் உண்மையான சட்டம் - ஒழுங்கு நிலை இதுதான் என்றும், இது திரைப்படத்தில் நடக்கும் காட்சியல்ல; நாம் வாழும் மாநிலத்தில் நடக்கிறது என்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயம் எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | பெங்களூரில் காவல்துறை முன்னாள் டிஜிபி படுகொலை! என்ன நடந்தது?

கா்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் கொலை!

கா்நாடக மாநில முன்னாள் காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) ஓம் பிரகாஷ் (68) அவரது வீட்டில் மா்மமான முறையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்து கிடந்தாா். அவரது உடலில் ஆயுதங்களைக் கொண்டு தாக்கிய அடையாளங்கள் உள... மேலும் பார்க்க

‘கியா’ காா் ஆலையில் 900 என்ஜின்கள் திருட்டு: 9 போ் கைது!

ஆந்திரத்தின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் அமைந்த ‘கியா’ காா் உற்பத்தி ஆலையில் கடந்த 5 ஆண்டுகளாக 900 என்ஜின்களை திருடிய குற்றச்சாட்டில் 9 போ் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது... மேலும் பார்க்க

முா்ஷிதாபாத் வன்முறை: தந்தை-மகன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

மேற்கு வங்க மாநிலம் முா்ஷிதாபாதில் வெடித்த வன்முறையின்போது தந்தை-மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இதுவரை இக்கொலை ... மேலும் பார்க்க

அமெரிக்க துணை அதிபருடன் இன்று பேச்சு: பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் சரமாரி கேள்வி!

தில்லியில் பிரதமா் மோடியுடன் அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தவுள்ள நிலையில், பிரதமருக்கு காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது. நான்கு நாள் பயணமாக இந்தியாவுக்க... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டம்: போராட்டத்தை தொடர ஒவைசி அழைப்பு

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டத்தைத் தொடர வேண்டும் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அஸாதுதீன் ஒவைசி அழைப்பு விடுத்துள்ளாா். மத்திய அரசு அண்மைய... மேலும் பார்க்க

மத்திய அரசு சம்பந்தப்பட்ட வழக்குகளை குறைக்க நடவடிக்கை: சட்ட அமைச்சகம்!

மத்திய அரசு சம்பந்தப்பட்ட வழக்குகளை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் சுமாா் 7 லட்சம் வழக்குகளில் மத்திய ... மேலும் பார்க்க