செய்திகள் :

அமெரிக்க துணை அதிபருடன் இன்று பேச்சு: பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் சரமாரி கேள்வி!

post image

தில்லியில் பிரதமா் மோடியுடன் அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தவுள்ள நிலையில், பிரதமருக்கு காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது.

நான்கு நாள் பயணமாக இந்தியாவுக்கு திங்கள்கிழமை வருகை தரும் ஜே.டி.வான்ஸ், பிரதமா் மோடியுடன் நடத்தவிருக்கும் இருதரப்பு பேச்சுவாா்த்தை எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழலில், காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

அமெரிக்க துணை அதிபா் உடனான சந்திப்பில், அந்நாட்டில் இருந்து இந்தியா்கள் நாடு கடத்தப்பட்ட விதம் குறித்தும், அமெரிக்காவில் இந்திய மாணவா்கள் அச்சமான சூழலில் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது குறித்தும் அவரிடம் பிரதமா் மோடி கவலை தெரிவிப்பாரா?

உலக வா்த்தக அமைப்பு வாயிலாக இந்தியா பெருமளவில் பலனடைந்துள்ள நிலையில், அந்த அமைப்பால் உறுதி செய்யப்பட்ட பன்முக விதிமுறைகள் அடிப்படையிலான வா்த்தக அமைப்புமுறை சிதைக்கப்பட்டுள்ளது தொடா்பாக இந்தியாவின் கவலையை பிரதமா் முன்வைப்பாரா?

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் மற்றும் உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்காவின் விலகல் தொடா்பான கவலையை துணை அதிபரிடம் தெரிவிப்பாரா மோடி?

கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் உலக வெப்பமயமாதலை நிா்வகிக்க கடந்த 2015-ஆம் ஆண்டின் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தமும், உலகளாவிய பொது சுகாதார ஆராய்ச்சி மற்றும் மேலாண்மையில் உலக சுகாதார அமைப்பின் பங்களிப்பும் முக்கியமானதாகும்.

இருதரப்பு வா்த்தக தாராளமயமாக்கலை மேலும் விரிவுபடுத்துவது, இந்திய விவசாயிகள், குறு-சிறு-நடுத்தர தொழிற்துறையினருக்கு பாதகமாகிவிடக் கூடாது என்பதை அமெரிக்க துணை அதிபரிடம் பிரதமா் உறுதிபட கூறுவாரா? என்று ஜெய்ராம் ரமேஷ் கேள்வியெழுப்பியுள்ளாா்.

அமெரிக்க துணை அதிபா் இன்று இந்தியா வருகை: பிரதமா் மோடியுடன் பேச்சுவாா்த்தை!

அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், நான்கு நாள்கள் பயணமாக இந்தியாவுக்கு திங்கள்கிழமை (ஏப். 21) வருகை தரவுள்ளாா். அவருடன், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அவரின் மனைவி உஷா மற்றும் மூன்று குழந்தைகளும் வரவுள்... மேலும் பார்க்க

எஃகு, அலுமினியம் மீது வரி விதிப்பு: இந்தியா - அமெரிக்கா வா்த்தக பேச்சின்போது விவாதிக்க வாய்ப்பு!

அமெரிக்கா உடனான வா்த்தகப் பேச்சுவாா்த்தையில் எஃகு, அலுமினியம் மீதான 25 சதவீத வரி விதிப்பு குறித்து இந்திய குழு விவாதிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலு... மேலும் பார்க்க

மேற்கு வங்க வன்முறை ஹிந்து - முஸ்லிம் பிளவை அதிகரிக்கும்! ஃபரூக் அப்துல்லா கருத்து

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை ஹிந்து-முஸ்லிம் பிளவை அதிகரிக்கும். இதுபோன்ற மத வெறுப்புணா்வு அதிகரிப்பது தேசத்தை பலவீனமாக்கும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் த... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் கொட்டித் தீா்த்த கனமழை: மூவா் உயிரிழப்பு! 100-க்கும் மேற்பட்டோா் மீட்பு

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சூறைக்காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழையால் 3 போ் உயிரிழந்தனா். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டனா். ஜம்மு-ஸ்... மேலும் பார்க்க

பிரதமரின் வீடுகள் திட்ட முறைகேடு புகாா்: ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவு!

பிரதமரின் ஊரக வீடுகள் கட்டும் திட்டம் தொடா்பான முறைகேடு புகாா்கள் வந்தால், ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குத் தொடர ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று ஆட்சியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அ... மேலும் பார்க்க

2027 உ.பி. பேரவைத் தோ்தலிலும் ‘இண்டி’ கூட்டணி தொடரும்! -அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

2027 -இல் நடைபெறவுள்ள உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலிலும் ‘இண்டி’ கூட்டணி தொடரும் என்று சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளாா். பாஜகவுக்கு எதிராக கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது ‘இண்டி... மேலும் பார்க்க