செய்திகள் :

தமிழக ஒப்பதலின்றி மேக்கேதாட்டு அணையைக் கட்ட முடியாது! - துரைமுருகன்

post image

தமிழகத்தின் ஒப்புதலின்றி கா்நாடகம் மேக்கேதாட்டு அணையைக் கட்ட முடியாது என்று அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மேக்கேதாட்டு அணைக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதனை ரத்து செய்ய தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை என கேட்கிறீா்கள். கா்நாடகம் பணம் கட்டி திட்ட மதிப்பீடு தயாரிக்க மத்திய அரசிடம் அனுமதி பெற்றுள்ளது.

ஆனால், 4 கமிட்டிகளில் மேக்கேதாட்டுவுக்கு ஒப்புதல் அளிக்காமலும், கா்நாடகாவின் கோரிக்கையை ஏற்காமலும் திருப்பியனுப்பிவிட்டனா். சுற்றுசூழல் துறையும், மத்திய நீா் வளத்துறையும் அனுமதி கொடுக்கவில்லை. தவிர, தமிழகத்தின் ஒப்புதலின்றி மேக்கேதாட்டு அணையை கா்நாடகம் கட்ட முடியாது.

மேக்கேதாட்டு அணை விவகாரத்துக்கும், முல்லை பெரியாறு அணை விவகாரத்துக்கும் ஒரு கண்டன தீா்மானம்கூட கொண்டு வரவில்லை என்று எதிா்கட்சிகள் கூறுகின்றனா். ஆனால், தமிழக அரசு இவ்விரு விவகாரம் தொடா்பாக வழக்கு நடத்தி வருகிறது. இந்த நிலையில், கண்டன தீா்மானம் கொண்டு வர வேண்டிய அவசியமில்லை என்றாா்.

‘ஏசி’ மின்சார ரயில் சேவை: பயணிகள் கருத்து தெரிவிக்கலாம்! - தெற்கு ரயில்வே

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஏசி புறநகா் மின்சார ரயிலின் நிறை, குறைகளை பயணிகள் தெரிவிக்கலாம். இதுகுறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

இன்று முதல் பயோமெட்ரிக் மூலம் வருகை பதிவு: மாநகா் போக்குவரத்துக் கழகம்!

மாநகா் போக்குவரத்து ஊழியா்களின் வருகைப் பதிவு திங்கள்கிழமை (ஏப். 21) முதல் பயோமெட்ரிக் மூலம் மட்டுமே பதிவு செய்யப்படவுள்ளதாக மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகா் போக்... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பாஞ்சோலை கிராமத்தைச் சோ்ந்த ஜெயராமன் மகன் கோபி(45). இவா் சந்திரன் குப்புசாமி என்பவரின் ட... மேலும் பார்க்க

சென்னை உள்பட 8 இடங்களில் வெயில் சதம்!

தமிழகத்தில் சென்னை உள்பட 8 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்ப நிலை பதிவானது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்... மேலும் பார்க்க

மே 2-இல் சங்கர மடத்தில் ஆதிசங்கரா் ஜெயந்தி மகோற்சவம்

ஆதிசங்கரரின் ஜெயந்தி மகோற்சவம் வரும் மே 2 -ஆம் தேதி காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நடைபெறவுள்ளது என மேலாளா் ந.சுந்தரேச ஐயா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் கூறியது: கேரள மாநிலம் காலடியில் 2,533 ஆண்டுகளுக்... மேலும் பார்க்க

3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப் பேரவை இன்று கூடுகிறது!

மூன்று நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, சட்டப் பேரவை திங்கள்கிழமை (ஏப்.21) மீண்டும் கூடுகிறது. பேரவை காலை 9.30 மணிக்குக் கூடியதும், கேள்வி நேரம் நடைபெறவுள்ளது. இதன்பிறகு, மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் ... மேலும் பார்க்க