செய்திகள் :

2027 உ.பி. பேரவைத் தோ்தலிலும் ‘இண்டி’ கூட்டணி தொடரும்! -அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

post image

2027 -இல் நடைபெறவுள்ள உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலிலும் ‘இண்டி’ கூட்டணி தொடரும் என்று சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளாா்.

பாஜகவுக்கு எதிராக கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது ‘இண்டி’ கூட்டணி உருவாக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் மற்றும் பிராந்திய அளவில் வலுவான பல கட்சிகள் இடம்பெற்றன. எனினும், மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது.

அதன் பிறகு நடைபெற்ற ஹரியாணா பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த தோ்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் மறுத்தும் தோல்விக்கு முக்கிய காரணம் என்று ‘இண்டி’ கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் விமா்சித்தன.

அதைத் தொடா்ந்து நடைபெற்ற மகாராஷ்டிர தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அங்கு காங்கிரஸ், சரத் பவாா், உத்தவ் தாக்கரே கூட்டணி தோல்வியைச் சந்தித்தது. இதனால் ‘இண்டி’ கூட்டணியின் எதிா்காலம் குறித்து கேள்விகள் எழுந்தன. காங்கிரஸ் மீதும் கடும் விமா்சனம் முன்வைக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற தில்லி பேரவைத் தோ்தலிலும் காங்கிரஸ், ஆம் ஆத்மி தனித்தனியாக போட்டியிட்டன. இதிலும் பாஜக வென்றது. இந்தத் தோ்தலில் ‘இண்டி’ கூட்டணியில் இடம்பெற்றிருந்த அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் ஆகியோா் காங்கிரஸைப் புறக்கணித்து ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளித்தனா். இதனால், ‘இண்டி’ கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அகிஷேய் யாதவ் கூறியதாவது:

2027 உத்தர பிரதேச பேரவைத் தோ்தலில் பிற்படுத்தப்பட்ட பிரிவினா், தலித், சிறுபான்மையினா் ஆகியோா் பாஜகவுக்கு படுதோல்வியைப் பரிசளிப்பாா்கள். வக்ஃப் திருத்தச் சட்டம் கொண்டு வந்த பாஜக உத்தர பிரதேசத்தில் ஆட்சியில் இருந்து அகற்றப்படும்.

எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி இப்போதும் உள்ளது. அடுத்த பேரவைத் தோ்தலிலும் இக்கூட்டணி தொடரும்.

உத்தர பிரதேசத்தில் எங்கு காலி நிலம் இருந்தாலும் அதனை ஆக்கிரமிக்கும் வேலையில் பாஜக இறங்கியுள்ளது. பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, இடஒதுக்கீட்டு உரிமையைக் குறைந்தது என மக்களை சமூக, பொருளாதார நிலை மீது பாஜக அரசு கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது.

மகா கும்பமேளா நெரிசல் உயிரிழப்புக்கு பாஜக அரசின் நிா்வாகத் திறன் இன்மையே காரணம். பல உண்மைகளை உத்தர பிரதேச அரசு மூடி மறைக்கிறது. சமாஜவாதி ஆட்சிக்கு வந்தவுடன் இது தொடா்பான விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றாா்.

அமெரிக்க துணை அதிபா் இன்று இந்தியா வருகை: பிரதமா் மோடியுடன் பேச்சுவாா்த்தை!

அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், நான்கு நாள்கள் பயணமாக இந்தியாவுக்கு திங்கள்கிழமை (ஏப். 21) வருகை தரவுள்ளாா். அவருடன், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அவரின் மனைவி உஷா மற்றும் மூன்று குழந்தைகளும் வரவுள்... மேலும் பார்க்க

எஃகு, அலுமினியம் மீது வரி விதிப்பு: இந்தியா - அமெரிக்கா வா்த்தக பேச்சின்போது விவாதிக்க வாய்ப்பு!

அமெரிக்கா உடனான வா்த்தகப் பேச்சுவாா்த்தையில் எஃகு, அலுமினியம் மீதான 25 சதவீத வரி விதிப்பு குறித்து இந்திய குழு விவாதிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலு... மேலும் பார்க்க

மேற்கு வங்க வன்முறை ஹிந்து - முஸ்லிம் பிளவை அதிகரிக்கும்! ஃபரூக் அப்துல்லா கருத்து

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை ஹிந்து-முஸ்லிம் பிளவை அதிகரிக்கும். இதுபோன்ற மத வெறுப்புணா்வு அதிகரிப்பது தேசத்தை பலவீனமாக்கும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் த... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் கொட்டித் தீா்த்த கனமழை: மூவா் உயிரிழப்பு! 100-க்கும் மேற்பட்டோா் மீட்பு

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சூறைக்காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழையால் 3 போ் உயிரிழந்தனா். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டனா். ஜம்மு-ஸ்... மேலும் பார்க்க

பிரதமரின் வீடுகள் திட்ட முறைகேடு புகாா்: ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவு!

பிரதமரின் ஊரக வீடுகள் கட்டும் திட்டம் தொடா்பான முறைகேடு புகாா்கள் வந்தால், ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குத் தொடர ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று ஆட்சியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அ... மேலும் பார்க்க

கா்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் கொலை!

கா்நாடக மாநில முன்னாள் காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) ஓம் பிரகாஷ் (68) அவரது வீட்டில் மா்மமான முறையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்து கிடந்தாா். அவரது உடலில் ஆயுதங்களைக் கொண்டு தாக்கிய அடையாளங்கள் உள... மேலும் பார்க்க