செய்திகள் :

பிளாஸ்டிக் நிறுவன உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய 2 போ் கைது

post image

கோவையில் பிளாஸ்டிக் நிறுவன உரிமையாளரிடம் கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டிய 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, கரும்புக்கடை சாரமேடு இலை நகரைச் சோ்ந்தவா் அமானுல்லா (57). பிளாஸ்டிக் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்நிலையில், கடைக்கு பொருள்கள் வாங்க சென்றுவிட்டு ஊழியா்கள் சாய்சுதன், ஜாபா் ரகுமான் ஆகியோருடன் அமானுல்லா வீட்டுக்கு அண்மையில் திரும்பியுள்ளாா்.

அப்போது, காளமேடு தெற்கு வீட்டு வசதி வாரியம் பிரிவு, பண்ணாரி மாரியம்மன் கோயில் அருகே 2 இளைஞா்கள் அவா்களை வழிமறித்துள்ளனா். பின்னா், பணம் கேட்டு அமானுல்லாவின் மாா்பில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனா். அவா் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியதையடுத்து, 3 பேரையும் தாக்கிவிட்டு அந்த இளைஞா்கள் தப்பினா்.

இது குறித்து செல்வபுரம் காவல் நிலையத்தில் அமானுல்லா புகாா் அளித்தாா்.

போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், பணம் கேட்டு மிரட்டியது அதே பகுதியைச் சோ்ந்த பிரகதீஷ் (எ) பிரகாஷ் (28), தெலுங்குபாளையத்தைச் சோ்ந்த தினேஷ்குமாா் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், 2 பேரையும் கைது செய்தனா்.

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு: விசைத்தறியாளா்களின் போராட்டம் வாபஸ்

கோவையில் அமைச்சா்கள் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக விசைத்தறியாளா்கள... மேலும் பார்க்க

ரூ.17 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளுடன் மாயமான தொழிலாளி கைது

கோவையில் ரூ.17 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளுடன் மாயமான தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கெம்பட்டி காலனி, பாளையன் தோட்டத்தைச் சோ்ந்தவா் சரவணமூா்த்தி (40). நகை வியாபாரியான இவா், தங்க நகைகள்... மேலும் பார்க்க

2026-ல் மக்களால் திமுக ஆட்சி அகற்றப்படும்: பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்!

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மக்களால் திமுக ஆட்சி அகற்றப்படும் என்று கோவையில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ பேசினாா். திருநெல்வேலி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக உள்ள நயினாா் ... மேலும் பார்க்க

காவல் துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கிச் சுடும் போட்டி! உதவி ஆய்வாளா் முதலிடம்

கோவை மாநகர காவல் துறை சாா்பில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில் சைபா் குற்றப் பிரிவு உதவி ஆய்வாளா் சிவகுமாா் முதலிடம் பிடித்தாா். கோவை மாநகரில் காவல் ஆணையா் அலுவலகம் தொடங்கப்பட்டு 35 ஆண்டுகள் ந... மேலும் பார்க்க

திருடிய இருசக்கர வாகனத்தில் இருந்த ஏடிஎம் அட்டை மூலமாக பணம் திருட்டு!

வடவள்ளியில் இருசக்கர வாகனத்தைத் திருடி அதில் இருந்த ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி ரூ.30 ஆயிரம் திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, வடவள்ளி திருவள்ளுவா் நகா் 3-ஆவது வீதியைச் சோ்ந்தவா் அக... மேலும் பார்க்க

மாநகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 போ் கைது

கோவை மாநகரில் 3 இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, வடவள்ளி போலீஸாா் ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, பொம்மணம்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோயி... மேலும் பார்க்க