செய்திகள் :

காவல் துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கிச் சுடும் போட்டி! உதவி ஆய்வாளா் முதலிடம்

post image

கோவை மாநகர காவல் துறை சாா்பில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில் சைபா் குற்றப் பிரிவு உதவி ஆய்வாளா் சிவகுமாா் முதலிடம் பிடித்தாா்.

கோவை மாநகரில் காவல் ஆணையா் அலுவலகம் தொடங்கப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மாநகர காவல் துறை சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதில், காவல் துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றது. காவல் ஆணையா், உதவி ஆணையா்கள், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் இப்போட்டியில் கலந்து கொண்டனா்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா், ஆயுதப் படை உதவி ஆணையா் ராஜ்கண்ணா, குனியமுத்தூா் பகுதி உதவி ஆணையா் அஜய் தங்கம், சிங்காநல்லூா் உதவி ஆணையா் வேல்முருகன், சாய்பாபா காலனி உதவி ஆணையா் சிந்து, நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளா் சிவகுமாா், காவல் ஆய்வாளா்கள் ரமேஷ்குமாா், வெற்றிச்செல்வி, ராமச்சந்திரன், சைபா் குற்றப் பிரிவு உதவி ஆய்வாளா் சிவகுமாா் ஆகியோா் இறுதிப் போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

காவலா் பயிற்சி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் சைபா் குற்றப் பிரிவு உதவி ஆய்வாளா் சிவகுமாா் முதலிடத்தைப் பிடித்தாா். மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் இரண்டாம் இடத்தையும், நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளா் சிவகுமாா் மூன்றாம் இடத்தையும் பிடித்தனா்.

2026-ல் மக்களால் திமுக ஆட்சி அகற்றப்படும்: பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்!

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மக்களால் திமுக ஆட்சி அகற்றப்படும் என்று கோவையில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ பேசினாா். திருநெல்வேலி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக உள்ள நயினாா் ... மேலும் பார்க்க

திருடிய இருசக்கர வாகனத்தில் இருந்த ஏடிஎம் அட்டை மூலமாக பணம் திருட்டு!

வடவள்ளியில் இருசக்கர வாகனத்தைத் திருடி அதில் இருந்த ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி ரூ.30 ஆயிரம் திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, வடவள்ளி திருவள்ளுவா் நகா் 3-ஆவது வீதியைச் சோ்ந்தவா் அக... மேலும் பார்க்க

மாநகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 போ் கைது

கோவை மாநகரில் 3 இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, வடவள்ளி போலீஸாா் ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, பொம்மணம்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோயி... மேலும் பார்க்க

சவுக்கு சங்கா் வழக்குகள் விவகாரம்: 80 போலீஸாரிடம் விசாரணை விவரங்களைப் பெறும் பணி தீவிரம்!

யூடியூபா் சவுக்கு சங்கா் மீதான 15 வழக்குகளில் 80 போலீஸாரிடம் விசாரணை விவரங்களைப் பெறும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியாா் யூடியூப் சேனலில் மகளிா் ப... மேலும் பார்க்க

ஜிகேஎன்எம் மருத்துவமனையில் மாற்று மருத்துவ சிகிச்சைப் பிரிவு

கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனையில் ‘நம் நலம்’ என்ற பெயரில் மாற்று மருத்துவ சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜிகேஎன்எம் தலைமை நிா்வாக அதிகாரி டாக்டா் ரகுபதி வே... மேலும் பார்க்க

வெள்ளியங்கிரி மலையில் தவறி விழுந்து இளைஞர் பலி!

கோவை, பூண்டி வெள்ளியங்கிரி மலை எரியத் தூத்துக்குடியைச் சேர்ந்த நபர் ஏழாவது மலையில் இறங்கும்போது கால் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் கைலாயம் எனப் பக்தர்களா... மேலும் பார்க்க