செய்திகள் :

31 வருடங்களுக்குப் பிறகு தூசுதட்டப்பட்ட வழக்கு; 32 வயது இளைஞன் 63 வயதில் AI மூலம் சிக்கியது எப்படி?

post image

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரக் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 1994-ம் ஆண்டு கொலை வழக்கொன்று பதிவானது.

அந்த வழக்கில் இரண்டுப் பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் இருவருமே, அரக்கோணத்தில் உள்ள ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்தில் பணிபுரிந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

முதல் குற்றவாளியான சௌத்ரி என்பவர் அப்போதே கைது செய்யப்பட்டார். நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு 2005-ம் ஆண்டு, சௌத்ரிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

எஸ்.பி விவேகானந்த சுக்லா

ஆனால், இரண்டாவது குற்றவாளியான அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பாஸ்கர் ஜோதி கோகோய் என்பவர் போலீஸாரிடம் பிடிபடாமல் தலைமறைவாகிவிட்டார்.

கோகோய் தப்பியோடிய போது, அவருக்கு வயது 32. இவ்வழக்கு 31 வருடங்களைக் கடந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி., விவேகானந்த சுக்லா அந்த வழக்கின் கோப்புகளைத் தூசுதட்டினார்.

கோகோயைப் பிடிக்க அரக்கோணம் நகரக் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன் மற்றும் எஸ்.ஐ நாராயணசாமி தலைமையில் தனிப்படை அமைத்தும் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டார் எஸ்.பி விவேகானந்த சுக்லா.

கோகோய் 63 வயதில் இப்போது எப்படியிருப்பார், அவரின் அடையாளம், உருவத் தோற்றம் என எல்லாமே மாறியிருக்குமே எனப் பல்வேறு கோணங்களில் போலீஸார் யோசித்தனர்.

பாஸ்கர் ஜோதி கோகோய்

32 வயதில் கோகோய் இருந்த புகைப்படத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 63 வயதில் எப்படியிருப்பார் என வரைந்தனர்.

அந்த உருவத்தை வைத்து அலசியபோது, அஸ்ஸாம் மாநிலம் திப்ருகார் மாவட்டத்தில் இருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்த தனிப்படை போலீஸார், ஏப்ரல் 18-ம் தேதி கோகோயைக் கைது செய்தனர்.

இதையடுத்து, அவரைத் தமிழ்நாட்டுக்கு அழைத்துவருவதற்கான ஏற்பாடுகளையும், சட்ட நடைமுறைகளையும் போலீஸார் துரிதப்படுத்தியிருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

திருச்சி: பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் இருவர் கைது; பின்னணி என்ன?

திருச்சி மாவட்டம், முசிறி பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு படிக்கும் சகோதரிகள் இருவர் பள்ளிக்கு வந்த நிலையில் மயங்கி உள்ளனர். இருவரையும் ஆசிரியர்கள் அதே பகுதியிலுள்ள அ... மேலும் பார்க்க

மொட்டைமாடியில் கஞ்சா வளர்த்த மத்திய அரசு அதிகாரி; தென்னையில் கள் இறக்கும் தொழிலாளியால் சிக்கினார்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத்துறை அலுவலகத்தில் அஸிஸ்டெண்ட் ஆடிட் ஆப்பிசராக ராஜஸ்தானைச் சேர்ந்த ஜெதின்(27) என்பவர் பணிபுரிந்துவந்தார். இவர் திருவனந்தபுரம் கம்லேஸ்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மதுபோதையில் தகராறு; மருமகனைப் பாறாங்கல்லால் தாக்கி கொன்ற மாமனார்; என்ன நடந்தது?

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர்- கீரைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மூத்த மகள் சங்கீதா. இவருக்கும் நாசரேத் கீழத்தெருவைச் சேர்ந்த மாடசாமி என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்க... மேலும் பார்க்க

மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர்; நாக்பூர் வரை ஃபாலோ செய்த போலீஸ்; இரு வாரத்திற்குப் பின் மீட்பு

கடந்த 6-ஆம் தேதியன்று கடத்தப்பட்ட பிரபல தொழிலதிபர் சுந்தரராமன் மதுரை காவல்துறையினரால் நேற்று மீட்கப்பட்டார். இந்த கடத்தலில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுகைது செய்ய... மேலும் பார்க்க

சென்னை: ரூ.17 லட்சம், 4 செல்போன்கள் - மாப்பிள்ளை என அழைத்து ஏமாற்றிய மணமகளின் அப்பா!

சென்னை வில்லிவாக்கம் நியூ ஆவடி சாலையில் வசித்து வருபவர் ஜெயபிரகாஷ் (31). இவர் வில்லிவாக்கம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு ஜெயபிரகாஷ், மணமகள் தேவை என் திருமண தக... மேலும் பார்க்க

தலைக்கேறிய மதுபோதை... தந்தையை கட்டையால் அடித்துக் கொன்ற மகன்! - திருச்சி அதிர்ச்சி

திருச்சி, திருவானைக்காவல் அழகிரிபுறம் அருகே உள்ள ஏ.யூ.டி நகரில் வசித்து வந்தவர் சோமசுந்தரம் (வயது: 45). இவர், சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மகன் மோகன்ர... மேலும் பார்க்க