செய்திகள் :

"துரையும் சத்யாவும் மனம் திறந்து பேசுனாங்க; இனி.." - மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்துக்குப் பின் வைகோ

post image

ம.தி.மு.க கட்சியின் முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக திருச்சி எம்.பி.யும் வைகோவின் மகனுமான துரை வைகோ நேற்று( ஏப்ரல் 19) அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

துரை வைகோவுக்கும், கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே ஏற்படும் கருத்து மோதல்களால்தான் துரை வைகோ ராஜினாமா செய்கிறார் என்று தகவல்கள் வெளியானது.

மதிமுக
மதிமுக

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 20) ம.தி.மு.க நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனைக்குப் பிறகு ம.தி.மு.க முதன்மைச் செயலர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்த துரை வைகோ தமது முடிவை வாபஸ் பெற்றிருக்கிறார்.

நிர்வாகக்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய வைகோ, “நான் எடுத்த முடிவைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன் என்று இந்தக் கூட்டத்தில் துரை வைகோ கூறினார். மல்லை சத்யாவும்- துரை வைகோவும் பரஸ்பரம் பேசிக்கொண்டார்கள்.

இருவரும் மனம் திறந்து பேசினார்கள். உள்ளம் திறந்து பேசினார்கள்.

தங்கள் உணர்வுகள் ஆவேசத்தின் வடிவில் வந்த வார்த்தைகள் போன்றவற்றை இருவருமே நாகரிகமான முறையில் கையாண்டார்கள்.

கட்சிக்கும், முதன்மைச் செயலாளருக்கும் இனி உறுதுணையாக செயல்பாடுவேன் என்று மல்லை சத்யா அவர்கள் கூறியிருக்கிறார்.

மதிமுக
மதிமுக

துரை வைகோ அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டு ஒற்றுமையாக இருந்து இந்த இயக்கத்தை வலுப்படுத்துவோம் என்று சொன்னதோடு மட்டும் அல்லாமல், 'நடந்து முடிந்தது, முடிந்ததாகவே இருக்கட்டும். இனி நடப்பவைகள் நல்லதாக நடக்கட்டும்' என்று கூறினார்.

இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு நாங்கள் இணைந்து பணியாற்றுவோம் என்ற சமிக்ஞையை நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்குத் தெரிவித்தார்கள்.

எனது வலது பக்கத்தில் துரை துரைவைக்கோவும், இடது பக்கத்தில் மல்லை சத்யாவும் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

'காங்கிரஸின் உறுதி பாஜகவிற்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது' - டி.ஆர் பாலு

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு திமுக பொருளாளர் டி.ஆர் பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "ஒன்றிய பா.ஜ.க. அரச... மேலும் பார்க்க

'அதிமுக போராட்டத்திற்கு கண்ணீர் அஞ்சலி' - சீமான் பதில்

அதிமுகவின் நீட் போராட்டம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சீமான் அளித்த பதில்..."அதிமுகவின் போராட்டத்திற்கு நான் வேண்டுமானால் ஒரு கண்ணீர் அஞ்சலி ... மேலும் பார்க்க

'கத்தி படிக்க வேண்டிய பள்ளிக்கூடத்திற்கு மாணவர்கள் கத்தி கொண்டு வருகிறார்கள்' - தமிழிசை

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பற்றி முன்னாள் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தப்போது பேசியதாவது..."தமிழ்நாட்டில் மக்கள் விரோத ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. இன்று திருச... மேலும் பார்க்க

"பாஜகவிற்கு விசிக தான் துருப்புச் சீட்டு; பாஜகவின் ஒரே நிலைபாடு இதுதான்!" - திருமா சொல்வது என்ன?

அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இப்போது கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள், தேர்தல் வேலைகள் என தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பரபரப்பாகி உள்ளன. இந்த நிலையில், கூட்டணி குறித்து... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் பரபரக்கும் நீட் விவகாரம்; 'தைரியமிருந்தால்...' அதிமுகவிற்கு துரைமுருகன் சவால்

அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. சமீபத்தில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகி உள்ளது. பாஜகவின் மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் தமிழ்நாட்டில் நீட... மேலும் பார்க்க

மதிமுக: "நான் அவரைக் காயப்படுத்தியிருந்தால் அதற்கு வருந்துகிறேன்" - மல்லை சத்யா சொல்வது என்ன?

மதிமுக கட்சியின் முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக திருச்சி எம்.பி.யும் வைகோவின் மகனுமான துரை வைகோ நேற்று (ஏப்ரல் 19) அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. துரை வைக... மேலும் பார்க்க