செய்திகள் :

'அதிமுக போராட்டத்திற்கு கண்ணீர் அஞ்சலி' - சீமான் பதில்

post image

அதிமுகவின் நீட் போராட்டம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சீமான் அளித்த பதில்...

"அதிமுகவின் போராட்டத்திற்கு நான் வேண்டுமானால் ஒரு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன். இந்த மாதிரி பல நாடகங்கள் நடந்திருக்கிறது... நடக்கும். கோயில் திருவிழாவின்போது எப்படி பல நாடகங்கள் நடக்குமோ, அதே மாதிரி தேர்தல் திருவிழாவின் போதும் பல நாடகங்கள் நடக்கும். இது ஒரு கொடுமை தான்.

'அரசிடமே சொந்த விமான நிலையம் இல்லை; அப்புறம் எதுக்கு பரந்தூரில் விமான நிலையம்?' - சீமான் கேள்வி
'அரசிடமே சொந்த விமான நிலையம் இல்லை; அப்புறம் எதுக்கு பரந்தூரில் விமான நிலையம்?' - சீமான் கேள்வி

நான் அந்த மக்களுக்கு ஒரு சத்தியம் செய்தேன். உங்கள் மகன் உயிரோடு இருக்கும்வரை விமான நிலையம் வராது என்று. அங்கே விமான நிலையம் கட்ட முடியாது... கட்ட விடமாட்டேன்.

சென்னை விமான நிலையத்தில் இண்டிகோவை தவிர பறக்க எதாவது விமானம் இருக்கிறதா? அது அங்கு வந்து விமானத்தை ஓட்டும் முதலாளிக்கானது.

பறக்கறதை பற்றியே கவலைப்படுகிறீர்களே... பசியோடு வாடும் ஆயிரக்கணக்கான மக்கள் பற்றிக் கவலைப்படுவதில்லை.

பறந்து எங்கு செல்லப்போகிறீர்கள்? தமிழ்நாட்டில்... இந்தியாவில் இண்டிகோ என்ற ஒரே ஒரு விமானம் நிறுவனம் தான் உள்ளது.

இங்கிருந்து மதுரை செல்ல ரூ.24,000. திரும்ப வருவதற்கு ரூ.24,000. கிட்டதட்ட ரூ.50,000. இண்டிகோ வைப்பது தான் கட்டணம். அவர்கள் விமானம் எடுக்கும் நேரம் தான் நேரம்.

அரசிடம் சொந்த விமான நிறுவனம் இல்லாதபோது, எதற்கு விமான நிலையம்... அதனால், விமான நிலைய திட்டத்தைக் கைவிடவேண்டும்" என்று பேசியுள்ளார்

'காங்கிரஸின் உறுதி பாஜகவிற்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது' - டி.ஆர் பாலு

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு திமுக பொருளாளர் டி.ஆர் பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "ஒன்றிய பா.ஜ.க. அரச... மேலும் பார்க்க

'கத்தி படிக்க வேண்டிய பள்ளிக்கூடத்திற்கு மாணவர்கள் கத்தி கொண்டு வருகிறார்கள்' - தமிழிசை

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பற்றி முன்னாள் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தப்போது பேசியதாவது..."தமிழ்நாட்டில் மக்கள் விரோத ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. இன்று திருச... மேலும் பார்க்க

"பாஜகவிற்கு விசிக தான் துருப்புச் சீட்டு; பாஜகவின் ஒரே நிலைபாடு இதுதான்!" - திருமா சொல்வது என்ன?

அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இப்போது கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள், தேர்தல் வேலைகள் என தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பரபரப்பாகி உள்ளன. இந்த நிலையில், கூட்டணி குறித்து... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் பரபரக்கும் நீட் விவகாரம்; 'தைரியமிருந்தால்...' அதிமுகவிற்கு துரைமுருகன் சவால்

அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. சமீபத்தில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகி உள்ளது. பாஜகவின் மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் தமிழ்நாட்டில் நீட... மேலும் பார்க்க

மதிமுக: "நான் அவரைக் காயப்படுத்தியிருந்தால் அதற்கு வருந்துகிறேன்" - மல்லை சத்யா சொல்வது என்ன?

மதிமுக கட்சியின் முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக திருச்சி எம்.பி.யும் வைகோவின் மகனுமான துரை வைகோ நேற்று (ஏப்ரல் 19) அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. துரை வைக... மேலும் பார்க்க

"துரையும் சத்யாவும் மனம் திறந்து பேசுனாங்க; இனி.." - மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்துக்குப் பின் வைகோ

ம.தி.மு.க கட்சியின் முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக திருச்சி எம்.பி.யும் வைகோவின் மகனுமான துரை வைகோ நேற்று( ஏப்ரல் 19) அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. துரை ... மேலும் பார்க்க