முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீ...
பெங்களூரில் காவல்துறை முன்னாள் டிஜிபி படுகொலை! என்ன நடந்தது?
பெங்களூரு: கர்நாடக மாநில காவல்துறை முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் அவரது வீட்டில் வைத்தே கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரிலுள்ள அவரது வீட்டிலிருந்து இன்று(ஏப். 20) அவரது உடலை போலீஸார் மீட்டுள்ளனர். அவருக்கு வயது 68.
உடலில் பல்வேறு பாகங்களில் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் டிஜிபி கொலை குறித்து வழக்கு பதிந்துள்ள காவல்துறை, எதற்காக இந்த கொலை நடந்தது? என்பதை கண்டறிய விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஓம் பிரகாஷ் கொல்லப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி பல்லவி காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். அதன் அடிப்படையில், அவரது வீட்டுக்குச் சென்ற காவல் துறை அதிகாரிகள் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இந்தநிலையில், பல்லவி மற்றும் அவரது மகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
பெங்களூரு எச்.எஸ்.ஆர் லே-அவுட் பகுதியிலுள்ளதொரு 3 மாடிகள் கொண்ட அடுக்குமாடி வீட்டில்தான் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. அந்த வீட்டில் தரைத்தளத்தில் தங்கியிருந்த ஓம் பிரகாஷ் இன்று கொல்லப்பட்டார். அந்த வீட்டுக்கு அடைக்கடி வந்தௌ சென்ற குடும்ப உறுப்பினரோ அல்லது பழக்கமானவரோ இந்த கொலைக்கு முக்கிய காரணமாக இருக்கக்கூடும் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.