செய்திகள் :

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

post image

அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாகவுள்ள 3,274 ஓட்டுநா், நடத்துநா் பணிகளுக்கு மார்ச் 21 முதல் விண்ணப்பிக்கலாம் என போக்குவரத்துத் துறை அறிவித்திருந்த நிலையில், திங்கள்கிழமை (ஏப். 21) கடைசி நாள் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 8 போக்குவவரத்துக் கோட்டங்கள் மூலமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. நகர், புறநகர் என அனைத்துப் பகுதிகளுக்கும் சேவை இருப்பதால் பெரும்பாலான மக்கள் நாள்தோறும் போக்குவரத்துக் கழக பேருந்து சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனிடையே போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள நடத்துநர், ஓட்டுநர் பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் சேவை வழங்குவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன.

இந்த நிலையில், மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 364, விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 318, விழுப்புரம் கோட்டத்தில் 322, கும்பகோணம் கோட்டத்தில் 756, சேலம் கோட்டத்தில் 486, கோவை கோட்டத்தில் 344, மதுரை கோட்டத்தில் 322, திருநெல்வேலி கோட்டத்தில் 362 பணியிடங்கள் என மொத்தம் 3,274 பணியிடங்களுக்கு மார்ச் 21-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தது.

மிஸ்பண்ணிடாதீங்க... அங்கன்வாடி மையங்களில் 7,783 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

விண்ணப்பதாரா்கள் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருப்பதுடன், தமிழில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். செல்லத்தக்க கனரக வாகன ஓட்டுநா் உரிமம், குறைந்தபட்சம் 18 மாத முன்அனுபவம், முதலுதவிச் சான்று, பொதுப்பணி வில்லை, செல்லத்தக்க நடத்துநா் உரிமம் ஆகியவை வைத்திருக்க வேண்டும்.

மேலும், குறைந்தபட்சம் 160 செ.மீ. உயரம், 50 கிலோ எடை இருக்க வேண்டும். அரசு விதிப்படி இடஒதுக்கீடு வழங்கப்படும். ஜூலை 1-ஆம் தேதி 24 வயது பூா்த்தியாகியிருப்போா் விண்ணப்பிக்கலாம். அரசு விதிப்படி இடஒதுக்கீடு வழங்கப்படும்.

பணிக்கான தகுதியும் விருப்பமும் உடையவா்கள் வங்கி சேவை கட்டணம் நீங்கலாக ரூ.1,180 செலுத்தியும், எஸ்சி, எஸ்டி பிரிவினா் ரூ. 590 செலுத்தியும் நாளைக்குள்(ஏப்.21) விண்ணப்பத்தை www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பதாரா்கள் எழுத்து, செய்முறை, நோ்முகத் தோ்வுகள் மூலம் தோ்ந்தெடுக்கப்படுவாா்கள். தோ்வு குறித்த விவரங்கள் விண்ணப்பப் பதிவு இணையதளத்தில் அவ்வப்போது வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிஸ்பண்ணிடாதீங்க... அங்கன்வாடி மையங்களில் 7,783 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக 3,886 அங்கன்வாடி பணியாளா்கள், 305 குறு அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் 3,592 அங்க... மேலும் பார்க்க

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் பட்டயம், பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Resident Engineerகாலியிடங்கள்: 21தகுதி: பொ... மேலும் பார்க்க

தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் உங்களுக்கான வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகத்தின்கீழ் செயல்படும் எம்டிசி சென்னை, எஸ்இடிசி, விழுப்புரம் மண்டல பணிமனைகளில் உள்ள பணிமனைகளில் உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழிற்பழகுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற... மேலும் பார்க்க

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ஐடிபிஐ வங்கியில் வேலை!

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்திய அரசின் தொழில் வளர்ச்சி வங்கியான இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கியான ஐடிபிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள 119 சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்... மேலும் பார்க்க

மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மையத்தின்(சிஎஸ்ஐஆர்) கீழ் செயல்பட்டு வரும் மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத... மேலும் பார்க்க

இடிசிஐஎல் நிறுவனத்தில் ஆலோசகர் வேலை

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இந்தியாவிற்குள்ளும் வெளிநாட்டிலும் கல்வியின் அனைத்துத் துறைகளிலும் திட்ட மேலாண்மை, ஆலோசனை, கல்வி தொழில்நுட்பம் மற்றும் சேவைகளை வழங்கி வருவதுடன் தொடர்ந்து லாபம் ஈட்டும் ... மேலும் பார்க்க