தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல...
துரை வைகோவுக்கு அரணாக இருப்பேன்: மல்லை சத்யா
சென்னை: மதிமுக முதன்மைச் செயலாளா் பொறுப்பில் இருந்து விலகும் முடிவை திரும்பப் பெற்றுவதாக அறிவித்த நிலையில், துரை வைகோவுடன் இணைந்து செயல்படுவேன் என்றும் துரை வைகோவுக்கு அரணாக இருப்பேன் என துணை பொதுச் செயலா் மல்லை சத்யா உறுதியளித்தார்.
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தாயகம் அலுவகத்தில் மதிமுக குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மதிமுக முக்கிய பொறுப்பாளர்கள் பொதுச் செயலாளர் துணை பொதுச்செயலாளர் பலர் கலந்து கொண்டனர்.
மதிமுக நிா்வாகக் குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. நிா்வாகக் குழு கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைகளுக்கு பின்பு துரை வைகோ தமது முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்தாா்.
மிஸ்பண்ணிடாதீங்க... அங்கன்வாடி மையங்களில் 7,783 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
இதுதொடர்பாக மல்லை சத்யா பேசியதாவது:
என்னுடைய நடவடிக்கை மதிமுகவின் கட்டுப்பாட்டுக்கு ஊறு நேரும் நிலை ஏற்பட்டதற்கு அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். இதுபோன்ற சூழள் இனி எதிர்காலத்தில் நிகழாது என உறுதியளித்தேன். எனது மன்னிப்பை ஏற்று தனது பொறுப்பில் தொடர்ந்து செயல்படுவேன் என அறிவித்துள்ள துரை வைகோவுக்கு என்றும் உறுதுணையாக இருப்பேன். இணைந்த கைகளுக்கு எப்போதும் வலிமை அதிகம். துரை வைகோவுடன் இணைந்து கட்சியின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம். துரை வைகோவுக்கு அரணாக இருப்போன் என உறுதியளித்தார்.