செய்திகள் :

சென்னை: முதல்முறையாக ஏசி வசதியுடன் புறநகர் ரயில் சேவை - இன்று முதல் தொடக்கம்; கட்டணம் எவ்வளவு?

post image

சென்னையில் முதல்முறையாக, சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரையில் ஏசி வசதியுடன் கூடிய புறநகர் மின்சார ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

கடந்த மார்ச் மாதம் இதற்கான சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட நிலையில் இன்று முதல் இச்சேவைப் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது.

இந்த ரயிலில் மொத்தமாக 12 பெட்டிகளில் ஏசி வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

ஏசி வசதியுடன் கூடிய இந்த ரயில், அதிகாலை 5:45 மணிக்கு தாம்பரம் பணிமனையிலிருந்து புறப்பட்டு சென்னை கடற்கரையை வந்தடைந்து, 7 மணிக்கு இங்கிருக்குந்து புறப்பட்டு 8:45 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும்.

மேலும், பிற்பகல் 3:45 மணிக்கும், இரவு 7:35 மணிக்கும் சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டுக்கு இந்த ஏசி ரயில் புறப்படும்.

அதேபோல், மறுமுனையில் செங்கல்பட்டிலிருந்து காலை 9 மணிக்கும், மாலை 5:45 மணிக்கு சென்னை கடற்கரையை நோக்கி இந்த ஏசி ரயில் புறப்படும்.

இந்த ரயில், வாரத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் இந்த ரயில் இயக்கப்படாது.

மேலும், இந்த ஏசி ரயிலில் அதிகபட்ச கட்டணமாக சென்னை கடற்கரை டு செங்கல்பட்டுக்கு வரை ரூ. 105 வசூலிக்கப்படும். தாம்பரம் டு செங்கல்பட்டு ரூ. 85-ம், தாம்பரம் டு எழும்பூர் ரூ. 60-ம் கட்டணமாக வசூலிக்கப்படும். குறைந்தபட்ச கட்டணம் ரூ. 35 ஆகும்.

இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்திருக்கும் இந்த ஏசி புறநகர் ரயில் சேவையில் கட்டணங்கள் குறித்த உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடவும்.

மதிமுக: "வைகோவின் முகம் பதித்த மோதிரம் என் அடையாளம்" - அனுபவம் பகிரும் மல்லை சத்யா

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்தெழுந்த நாளை ஈஸ்டர் திருநாளாக மக்கள் கொண்டாடி வருகிறார்கள். ம.தி.மு.க துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா ஈஸ்டர் திருநாளுக்கு வாழ்த்து தெரிவித்து, வாட்டிகன் நகர... மேலும் பார்க்க

NTK: `சாட்டை சேனலுக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை’ - சீமானின் `திடீர்’ கண்டிப்பின் பின்னணி!

நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் துரைமுருகன் நடத்திவரும் `சாட்டை` யூட்யூப் சேனலுக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என அறிவித்திருக்கிறார் சீமான். முன்னணி நிர்வாகிகளுக்கு இடையேயான பனிப்போர்தா... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: பூங்காவில் மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம்; கவுன்சிலரின் கணவர் மீது புகார்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சியின் 4வது வார்டு பகுதியாகிய பாபு நகரில் உள்ள பூங்கா, கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு மரங்களை வளர்த்து சிறுகாடாக மாற்றப்பட்டிருந்தது. இதில் நீர் மருது, புரசை, தே... மேலும் பார்க்க

வேலூர்: பள்ளிக்கூடங்களுக்கு அருகிலேயே செயல்படும் டாஸ்மாக் கடை.. இடம் மாற்றக் கோரும் சமூக ஆர்வலர்கள்!

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பகுதியில் சல்லாபுரி அம்மன் கோயில் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின... மேலும் பார்க்க

புதிதாக கட்டப்பட்ட பாளையங்கோட்டை சந்தை; திறக்கப்படுவது எப்போது? - காத்திருக்கும் வியாபாரிகள்!

பாளையங்கோட்டை புதிய மார்க்கெட் எப்போது திறக்கப்படும் என்பதை பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட், நெல்லை மக்... மேலும் பார்க்க

`Wifi முதல் மின்சார உற்பத்திவரை' - இந்தியாவின் முதல்`Smart Village' இப்போது எப்படி இருக்கிறது?

``காலேஜ் படிச்சிட்டு இருக்குற இவன் எதுக்கு பஞ்சாயத்து தலைவர போய் பாக்குறான்... அவர் என்கிட்ட வந்து 'என்னப்பா உன் புள்ளை என்கிட்ட கேள்விலாம் கேக்குறான்... என்னனு கவனிக்க மாட்டியானு' மொறக்கிறாரு..." என ... மேலும் பார்க்க