செய்திகள் :

`போதைப்பொருள் சப்ளை, பாலியல் தொல்லை புகார்' - நடிகர் ஷைன் டோம் தாமஸ் சினிமாவில் நடிக்க தடை?

post image

கேரள கொச்சி கலூரில் உள்ள ஓட்டலில் போதைப்பொருள் விற்கும் கும்பல் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த புதன்கிழமை இரவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்.

அதில் போதைப்பொருள்கள் விற்கும் கும்பலைச் சேர்ந்த மலப்புறத்தைச் சேர்ந்த அஹம்மது முர்ஷாத்(25) என்பவர் கைது செய்யப்பட்டார். அப்போது ஓட்டலின் 3-வது மாடியில் தங்கியிருந்த நடிகர் ஷைன் டோம் சாக்கோ போலீஸிடம் சிக்காமல் இருக்க இரண்டாவது மாடியில் குதித்ததுடன், அங்கிருந்து முதல் மாடியில் உள்ள நீச்சல் குளத்தில் குதித்து தப்பி ஓடினார்.

போதைப்பொருள் சப்ளை வழக்கில் சிக்கிய ஷைன் டோம் சாக்கோ

அவர் தப்பிச் செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பாதிவாகி இருந்தது. இதையடுத்து போதைப்பொருள் விற்பனை குறித்த ஆதாரங்களை அழிக்கும் விதமாக ஷைன் டோம் சாக்கோ தப்பி ஓடியதாக கொச்சி நார்த் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து ஷைன் டோம் சாக்கோ தனது வழக்கறிஞருடன் கடந்த சனிக்கிழமை காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில்,  போதை பொருள்கள் சப்ளை கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

முதலில் குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஷைன் டோம் சாக்கோ. ஷைன் டோம் சாக்கோ-வின் வங்கி கணக்குகள் மற்றும் வாட்ஸ்அப் சாட் ஆகியவற்றை ஆய்வு செய்தபோது அவர் போதைப்பொருள் விற்கும் கும்பலுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது.

மலையாள சினிமா நடிகர்களுக்கு போதைப்பொருள்கள் சப்ளை செய்யும் நெட்வொர்க்கில் சினிமா துறையைச் சேர்ந்த சிலரும் உள்ளதாகவும். தானும் மற்றொருவரும் மட்டுமே பழிக்கு ஆளாகியுள்ளோம் எனவும் ஷைன் டோம் சாக்கோ வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

ஷைன் டோன் சாக்கோ-விடம் இருந்து போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்படவில்லை என்பதால் போலீஸார் அன்று மாலை அவரை ஜாமினில் விடுவித்தனர்.

நடிகர் ஷைன் டோம் சாக்கோ

இந்த நிலையில் இன்று மாலை 3 மணிக்கு நடக்க உள்ள கேரளா பிலிம் சேம்பர் ஆஃப் மானிட்டரிங் மீட்டிங்கில் ஷன் டோம் சாக்கோ சினிமாவில் நடிக்க தடை விதிக்கும் தீர்மானம் கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொன்னாணி பகுதியில் நடந்த சினிமா படபிடிப்புக்கு இடையே ஷைன் டொம் சாக்கோ தன்னிடம் மோசமாக நடந்துகொண்டதாகவும், பெண்மையை களங்கப்படுத்தும் விதமாக நடந்துகொண்டதாகவும் நடிகை வின்ஸி அலோஸியஸ் கூறிய புகார்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

இந்த கூட்டத்தில் மலையாள சினிமா நடிகர்கள் சங்கமான அம்மா, பெப்கா உள்ளிட்ட சினிமா சார்ந்த அமைப்புகளைச் சேர்ந்த 21 நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

தூத்துக்குடி: மதுபாட்டிலை மறைத்து வைத்த தோழி; ஆத்திரத்தில் கட்டையால் அடித்துக் கொன்ற இளைஞர்!

தூத்துக்குடி மாவட்டம், பண்டாரவிளையைச் சேர்ந்தவர் ஜெபா வைலட். இவர், தன் முதல் கணவருடன் விவாகரத்து பெற்ற நிலையில், இரண்டாவதாக அதே பகுதியைச் சேர்ந்த லிங்கராஜ் என்பவருடம் திருமணம் ஆகியுள்ளது. இந்த நிலையில... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மதுபோதையில் இரு சக்கர வாகனத்தில் வேகமாகச் சென்ற கும்பல்; கண்டித்த கப்பல் மாலுமி கொலை

தூத்துக்குடி, திரேஸ்புரம் கடற்கரைப் பகுதியைச் சேர்ந்தவர் மரடோனா. கப்பல் மாலுமியான இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு கப்பலில் இருந்து விடுமுறைக்காக வந்தவர் வீட்ட... மேலும் பார்க்க

திருச்சி: பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் இருவர் கைது; பின்னணி என்ன?

திருச்சி மாவட்டம், முசிறி பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு படிக்கும் சகோதரிகள் இருவர் பள்ளிக்கு வந்த நிலையில் மயங்கி உள்ளனர். இருவரையும் ஆசிரியர்கள் அதே பகுதியிலுள்ள அ... மேலும் பார்க்க

மொட்டைமாடியில் கஞ்சா வளர்த்த மத்திய அரசு அதிகாரி; தென்னையில் கள் இறக்கும் தொழிலாளியால் சிக்கினார்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத்துறை அலுவலகத்தில் அஸிஸ்டெண்ட் ஆடிட் ஆப்பிசராக ராஜஸ்தானைச் சேர்ந்த ஜெதின்(27) என்பவர் பணிபுரிந்துவந்தார். இவர் திருவனந்தபுரம் கம்லேஸ்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மதுபோதையில் தகராறு; மருமகனைப் பாறாங்கல்லால் தாக்கி கொன்ற மாமனார்; என்ன நடந்தது?

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர்- கீரைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மூத்த மகள் சங்கீதா. இவருக்கும் நாசரேத் கீழத்தெருவைச் சேர்ந்த மாடசாமி என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்க... மேலும் பார்க்க

மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர்; நாக்பூர் வரை ஃபாலோ செய்த போலீஸ்; இரு வாரத்திற்குப் பின் மீட்பு

கடந்த 6-ஆம் தேதியன்று கடத்தப்பட்ட பிரபல தொழிலதிபர் சுந்தரராமன் மதுரை காவல்துறையினரால் நேற்று மீட்கப்பட்டார். இந்த கடத்தலில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுகைது செய்ய... மேலும் பார்க்க