செய்திகள் :

ரூ. 9 ஆயிரத்தைக் கடந்து உச்சம் தொட்ட தங்கம் விலை!

post image

சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 9 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. . ஏப்.13-ல் தங்கம் விலை சவரனுக்கு ரூ.70,000-யைக் கடந்த நிலையில் பின்னர் சற்று சரிவடைந்த நிலையில் ஏப். 16-ல் மீண்டும் 70,000-யைக் கடந்தது. தற்போது தங்கத்தின் விலை ரூ. 72,000-யைக் கடந்துள்ளது.

இன்று(திங்கள்கிழமை) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 உயா்ந்து ரூ.72,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 70 உயர்ந்து ரூ. 9,015-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி கிராமுக்கு ரூ. 1 உயர்ந்து ரூ.111-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 1,11,000-க்கும் விற்பனையாகிறது.

கடந்த வாரம் மூன்று நாள்களாக தங்கத்தின் விலை மாற்றமின்றி இருந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா: டெண்டர் கோரியது தமிழக அரசு!

ரயில்களில் காவி நிறத்துக்கு காட்டும் ஆர்வத்தை பயணிகளின் பாதுகாப்பில் காட்டுங்கள்! - சு.வெங்கடேசன்

காவிநிறத்துக்கு காட்டும் ஆர்வத்தை பயணிகளின் பாதுகாப்பில் காட்டுங்கள்! - சு.வெங்கடேசன்வந்தே பாரத் ரயிலின் முன்பகுதி பெட்டி, சாதாரண ரயில்களின் முன்பகுதி என்ஜின்களைவிட மிகவும் எடை குறைவு என்று ரயில்வே ஆண... மேலும் பார்க்க

டாஸ்மாக் சோதனையை எதிர்த்த வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு!

சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய தொடா் சோதனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை மறுநாள் தீர்ப்பளிக்கிறது.டாஸ்மாக் நிர்வாக... மேலும் பார்க்க

அமலாக்கத்துறை வழக்கிலும் ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன்!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிற்கு, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் ச... மேலும் பார்க்க

சிவாஜி இல்லத்தின் உரிமையாளர் பிரபுதான்! ஜப்தி உத்தரவு ரத்து!

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்துள்ளது.மேலும், சிவாஜியின் வீட்டில் தனக்கு உரிமையோ, பங்கோ இல்லை என்று அவரது மூத்த மகன் ராம்குமார் தாக்... மேலும் பார்க்க

தலைக்கவசம் அணியாத காவலர்கள் இடைநீக்கம்: டிஜிபி உத்தரவு!

தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டும் காவலர்களை உடனடியாக இடைநீக்கம் செய்ய தமிழக காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து ச... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா: டெண்டர் கோரியது தமிழக அரசு!

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா கட்டுமானப் பணிகளுக்கு தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக சட்டப்பேரவையில், வர்த்தக மற்றும் தொழில் துறைக்கான மானியக் கோரிக்கையின்போது அமைச்சர... மேலும் பார்க்க