செய்திகள் :

தலைக்கவசம் அணியாத காவலர்கள் இடைநீக்கம்: டிஜிபி உத்தரவு!

post image

தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டும் காவலர்களை உடனடியாக இடைநீக்கம் செய்ய தமிழக காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளது. தலைக்கவசம் அணியாதவர்களுக்கு போக்குவரத்து காவலர்கள் ரூ. 1,000 அபராதம் விதிக்கின்றனர்.

தொடர்ந்து தலைக்கவசம் அணியாமல் காவலர்களிடம் பிடிபடுபவரின் வாகன ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அபராதம் விதிக்கும் காவலர்களே தலைக்கவசம் அணியாமல் செல்வதாக புகார் எழுந்துள்ளது. மேலும், தலைக்கவசம் அணியாமல் செல்பவர்களை விடியோ எடுக்கும் மக்கள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவிடுகின்றனர். இது காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அமைகிறது.

இந்த நிலையில், தலைக்கவசம் அணியாமல் செல்லும் காவலர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய அனைத்து மாநகர ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், காவல் நிலையங்களில் நாள்தோறும் காலை நடைபெறும் வருகைபதிவு கூட்டத்தில், இருசக்கர வாகனத்தில் வரும் காவலர்கள், மேல் அதிகாரியிடம் தலைக்கவசத்தை காண்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைக்கவசம் இல்லாமல் வரும் காவலர்களின் வாகன சாவியை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், ஐஎஸ்ஐ முத்திரை பதித்த தலைக்கவசம் வாங்கிவந்த பிறகு சாவியைக் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைத்து காவலர்களும் சீட் பெல்ட் போட வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : கர்நாடக முன்னாள் டிஜிபியைக் கொன்றதாக மனைவி வாக்குமூலம்! என்ன நடந்தது?

ரயில்களில் காவி நிறத்துக்கு காட்டும் ஆர்வத்தை பயணிகளின் பாதுகாப்பில் காட்டுங்கள்! - சு.வெங்கடேசன்

காவிநிறத்துக்கு காட்டும் ஆர்வத்தை பயணிகளின் பாதுகாப்பில் காட்டுங்கள்! - சு.வெங்கடேசன்வந்தே பாரத் ரயிலின் முன்பகுதி பெட்டி, சாதாரண ரயில்களின் முன்பகுதி என்ஜின்களைவிட மிகவும் எடை குறைவு என்று ரயில்வே ஆண... மேலும் பார்க்க

டாஸ்மாக் சோதனையை எதிர்த்த வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு!

சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய தொடா் சோதனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை மறுநாள் தீர்ப்பளிக்கிறது.டாஸ்மாக் நிர்வாக... மேலும் பார்க்க

அமலாக்கத்துறை வழக்கிலும் ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன்!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிற்கு, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் ச... மேலும் பார்க்க

சிவாஜி இல்லத்தின் உரிமையாளர் பிரபுதான்! ஜப்தி உத்தரவு ரத்து!

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்துள்ளது.மேலும், சிவாஜியின் வீட்டில் தனக்கு உரிமையோ, பங்கோ இல்லை என்று அவரது மூத்த மகன் ராம்குமார் தாக்... மேலும் பார்க்க

ரூ. 9 ஆயிரத்தைக் கடந்து உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 9 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. . ஏப்.13-ல் தங்கம் விலை சவரனு... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா: டெண்டர் கோரியது தமிழக அரசு!

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா கட்டுமானப் பணிகளுக்கு தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக சட்டப்பேரவையில், வர்த்தக மற்றும் தொழில் துறைக்கான மானியக் கோரிக்கையின்போது அமைச்சர... மேலும் பார்க்க