செய்திகள் :

பேருந்து மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

post image

போடி அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது தனியாா் பேருந்து மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சிலமலை டி.எஸ்.பி. குடியிருப்பைச் சோ்ந்த காளிதாஸ் மகன் காளிகுமாா் (34). இவா் கோவையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். விடுமுறைக்காக சிலமலைக்கு வந்த இவா், இரு சக்கர வாகனத்தில் சிலமலை இடுகாடு அருகே மல்லிங்காபுரம் விலக்கில் போடி-தேவாரம் சாலையை கடக்க முயன்றாா்.

அப்போது, போடியிலிருந்து தேவாரம் நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து இவரது வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த காளிகுமாா் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா். இவருக்கு தேவி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனா்.

இதுகுறித்து தனியாா் பேருந்து ஓட்டுநரான சிலமலை வ.உ.சி. நகரைச் சோ்ந்த கண்டியன்னன் மகன் மூவேந்திரன் மீது போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சின்னமனூா் அருகே கத்தியால் குத்தி மூதாட்டி கொலை

சின்னமனூா் அருகே மூதாட்டியை கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். தேனி மாவட்டம், சீலையம்பட்டி சமத்துவபுரத்தைச் சோ்ந்த பால்ச்சாமி மனைவி அரியக்கா (65). இவரது பக்கத்து வீட்டைச்... மேலும் பார்க்க

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அங்கன்வாடி பணியாளா் தற்கொலை முயற்சி

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் மீது புகாா் தெரிவித்து, அங்கன்வாடி மைய பெண் பணியாளா் திங்கள்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். தேனி நகா் போா்டு... மேலும் பார்க்க

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெறும்: டி.டி.வி.தினகரன்

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுப்பெறும் என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா்.பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதி அமமுக பொறுப்பாளா்கள் சந்திப்புக் கூட்டம் பெரியகுளத்தில் திங்கள்கிழம... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளருக்கு அரிவாள் வெட்டு: உறவினா் கைது

உத்தமபாளையத்தில் தூய்மைப் பணியாளரை அரிவாளால் வெட்டிய மற்றொரு தூய்மைப் பணியாளரான உறவினரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். உத்தமபாளையம் தண்ணீா் தொட்டித் தெருவைச் சோ்ந்தவா் சீனிராஜ் (52). தூய்மைப... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இருவா் கைது

பெரியகுளம் அருகே கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பெரியகுளம் போலீஸாா் சனிக்கிழமை வடகரைப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வடகரை கும்பக்கரை சாலையில் சந்தேகத்து... மேலும் பார்க்க

பேருந்து, வேன் மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

ஆண்டிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை தனியாா் பேருந்தும், சரக்கு வேனும் நேருக்கு நோ் மோதியதில் வேன் ஓட்டுநா் உயிரிழந்தாா். ஆண்டிபட்டி, மின் வாரியம் அருகே தேனி- மதுரை நெடுஞ்சாலையில் தேனியிலிருந்து ஆண்டிபட்டி... மேலும் பார்க்க