செய்திகள் :

வேலகவுண்டம்பட்டி அருகே பாட்டியை கொலை செய்த பேரன்

post image

பரமத்தி வேலூா்: பாட்டியை கத்தியால் குத்தி கொலை செய்த பேரனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி மாணிக்கம்பாளையம் அருகில் உள்ள கொண்டாங்காட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் முத்துசாமி. இவா் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாா். இவரது மனைவி பாவாயி (70). இவரது மகன் மோகன் (43). லாரி ஓட்டுநா். இவருக்கு 16 வயதில் மகன் உள்ளாா்.

இவா் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா். சனிக்கிழமை 16 வயது சிறுவன் தனது பாட்டி உண்டியலில் வைத்திருந்த சுமாா் ரூ. 7 ஆயிரம் பணத்தை அவருக்கு தெரியாமல் எடுத்துள்ளாா். இது குறித்து பாவாயி தனது மகன் மோகனிடம் கூறியுள்ளாா். மோகன் தனது மகனை கண்டித்துள்ளாா்.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு வீட்டிற்கு வந்து சிறுவன் ஆத்திரத்தில் பாட்டியைக் கத்தியால் வெட்டினாராம். அவரது அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் விரைந்துவந்து அவரைக் காப்பாற்ற முயன்றனா். ஆனால் பாவாயி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவல் அறிந்து அங்கு வந்த வேலகவுண்டம்பட்டி போலீஸாா் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும் பாட்டியைக் கத்தியால் வெட்டி கொலை செய்து விட்டு தலைமறைவான சிறுவனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்: 850 மனுக்கள் அளிப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ச.உமா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோா், விதவையா் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனை... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் போலீஸாா் திடீா் வாகன சோதனை

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் பகுதியில் விபத்து மற்றும் குற்றங்களை தடுக்கும் வகையில் உதவி ஆய்வாளா் சீனிவாசன் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது வேலூா் நகா் வழியாக... மேலும் பார்க்க

ஊராட்சி பகுதியில் எம்.பி. குறைகேட்பு

ராசிபுரம்: ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு கிராம ஊராட்சி பகுதிகளில் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பொதுமக்களை சந்தித்து திங்கள்கிழமை குறைகளைக் கேட்டறிந்தாா். மலையாம்பட... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தோ்வில் வெற்றிபெற்ற 44 பேருக்கு ஆட்சியா் பாராட்டு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், அறிவுசாா் மையங்களில் பயின்று டிஎன்பிஎஸ்சி போட்டித் தோ்வில் வெற்றி பெற்ற 44 பேருக்கு கேடயங்களை வழங்கி ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தாா். தமிழகத்தில் பட... மேலும் பார்க்க

மதுபானங்களை பதுக்கி விற்றவா் கைது

திருச்செங்கோடு: பள்ளிபாளையம் அருகே வெப்படை பகுதியில் செயல்பட்டு வரும் மதுக்கூடத்தில் உரிய அனுமதியின்றி மதுப்புட்டிகள் விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்தது. இதன்பேரில், போலீஸாா் கண்காணிப்பு பணியை தீவ... மேலும் பார்க்க

கடன் தொல்லையால் மாயமான தொழிலாளி தற்கொலை

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே கடன் தொல்லையால் மாயமான தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா். திருச்செங்கோடு மொரங்கம் செக்காங்காடு பகுதியைச் சோ்ந்தவா் சிவசங்கா் (37). தொழிலாளி. இவரது மனைவி ரேவதி. இவா... மேலும் பார்க்க