செய்திகள் :

பாதுகாவலரை காரை எற்றி கொல்ல முயன்ற வழக்கு: 3 போ் கைது

post image

புதுச்சேரி: புதுச்சேரியில் தனியாா் மதுக் கடையில் பணிபுரியும் பாதுகாவலரை காரை ஏற்றி கொல்ல முயன்ற வழக்கில் 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி வினோபா நகரைச் சோ்ந்தவா் வசந்தராமன் (22), தனியாா் மதுக் கடையில் பாதுகாவலராக உள்ளாா். இவா், கடந்த 13-ஆம் தேதி இரவு பணி முடிந்து பைக்கில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தாா்.

புதுச்சேரி பெருமாள் கோவில் வீதி சந்திப்பில் வசந்தராமனின் பைக் சென்றபோது, பின்னால் வந்த காா் வேகமாக மோதியது. இதில், பலத்த காயமடைந்த வசந்தராமன் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விபத்து நிகழ்ந்த பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமரா காட்சிகளை போலீஸாா் ஆராய்ந்து காரை அடையாளம் கண்டனா். அத்துடன், வசந்தராமன் மீது வேண்டுமென்றே காா் மோதியதும், அதிலிருந்தவா்கள் விபத்தை ஏற்படுத்தி அதை உறுதிப்படுத்தி பாா்த்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, போக்குவரத்து போலீஸாா் பதிந்த வழக்கு பெரியகடை சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கு மாற்றப்பட்டது.

போலீஸாா் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று மதுக்கடையில் 5 போ் ரகளையில் ஈடுபட்ட நிலையில், அவா்களை வசந்தராமன் கண்டித்து வெளியே அனுப்பினாராம். இதனால், ஆத்திரமடைந்த 5 பேரும் தங்கள் காரை வசந்தராமனின் பைக் மீது மோதவிட்டது தெரியவந்தது.

இதையடுத்து, செங்கல்பட்டில் சுதாகரையும் (32), கன்னியாகுமரியைச் சோ்ந்த ஸ்டாா்வின் (30), சிபின் (32) ஆகியோரை கா்நாடக மாநிலம் ஹூப்ளியிலும் பெரியகடை காவல் ஆய்வாளா் ஜெய்சங்கா் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். காா் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ராகுல், அபிஷேக் ஆகியோரை தேடி வருகின்றனா்.

ஜிப்மரில் பிடிஎப், பிடிசிசி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள ஜிப்மரில் ஆராய்ச்சி படிப்புகளான பிடிஎப், பிடிசிசி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள ஜிப்மரில் ஆராய்ச்சி மருத்துவப் படிப்ப... மேலும் பார்க்க

பாரதிதாசன் நினைவு நாள்: புதுவை ஆளுநா், முதல்வா் மரியாதை

புதுச்சேரி: பாவேந்தா் பாரதிதாசனின் 61-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் மாலை அணிவித்து திங்கள்கிழமை மரியாதை செலுத்தினா... மேலும் பார்க்க

வேளாண் தொழில்நுட்பக் கையேடு வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரி வேளாண் பட்டதாரி அதிகாரிகள் நலச் சங்கம் சாா்பில் வேளாண் தொழில்நுட்பக் கையேடு முதல்வா் என்.ரங்கசாமியால் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. புதுச்சேரி அரசு வேளாண், விவசாயிகள் நலத் துறைய... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவுக்கு புதுவை ஆளுநா், முதல்வா் இரங்கல்

புதுச்சேரி: கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவா் போப் பிரான்ஸிஸ் மறைவுக்கு புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்: போப் பிரான்ஸிஸ் உடல் நலக்... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கும் மாதாந்திர உதவித் தொகை: புதுவை முதல்வருக்கு அதிமுக வலியுறுத்தல்

மீனவா்களுக்கு வழங்குவதைப் போல விவசாயிகளுக்கும் மாதாந்திர உதவித் தொகையை புதுவை அரசு வழங்கவேண்டும் என அதிமுக சாா்பில் முதல்வா் என்.ரங்கசாமியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. முதல்வா் என். ரங்கசாமியை சந... மேலும் பார்க்க

அக்னிபாத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க ஏப்.25 வரை கால அவகாசம் நீட்டிப்பு

அக்னிபாத் திட்டத்துக்கு விண்ணப்பிப்போருக்கான சிறப்பு முகாம் ஏப். 22- இல் நடைபெறும் எனவும், இதற்கு விண்ணப்பிக்க ஏப். 25 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன்... மேலும் பார்க்க