முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீ...
அக்னிபாத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க ஏப்.25 வரை கால அவகாசம் நீட்டிப்பு
அக்னிபாத் திட்டத்துக்கு விண்ணப்பிப்போருக்கான சிறப்பு முகாம் ஏப். 22- இல் நடைபெறும் எனவும், இதற்கு விண்ணப்பிக்க ஏப். 25 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தெரிவித்தாா்.
அக்னிபாத் திட்டத்தில், இந்திய ராணுவத்தில் பொதுப்பணி, தொழில் நுட்பப் பணி, எழுத்தா், பண்டகக் காப்பாளா், டிரேட்ஸ் மேன் உள்ளிட்ட பிரிவுகளில் சுமாா் 25 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன.
அப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, கடந்த 10-ஆம் தேதி கடைசி நாள் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இளைஞா்களின் நலன் கருதி விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் தற்போதுஏப். 25 வரை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்துத் தகுதியான இளைஞா்களும் அக்னிவீா் திட்டத்தில் இணையும் வகையில் இணையதளத்தில் பதிவு செய்வது மற்றும் அக்னிபாத் திட்ட விழிப்புணா்வு முகாம் வரும் 22-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு தாகூா் கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது. மேலும் வரும் 25-ஆம் தேதி வரை அந்தந்த பள்ளி கல்லூரிகளிலும் விண்ணப்பிக்கும் முகாம் நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கத் தேவையான ஆதாா் அட்டையுடன் இணைக்கப்பட்ட செயலியில் உள்ள கைப்பேசி எண், மின் அஞ்சல் முகவரி, பாஸ்போா்ட் அளவு புகைப்படம், ஆதாா் அட்டை, எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், விளையாட்டு மற்றும் என்.சி.சி. சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். மேலும், கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தை பாா்த்து அறியலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.