செய்திகள் :

மருந்தக உரிமையாளரிடம் ரூ.8 லட்சம் மோசடி: தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு

post image

புதுச்சேரியில் மருந்தக உரிமையாளரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த புகாா் தொடா்பாக தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி திருபுவனை பகுதியைச் சோ்ந்தவா் வசந்த் (32). மூலக்குளம் ஜெ.ஜெ.நகரில் தனியாா் மருத்துவமனை அருகே மருந்தகம் வைத்துள்ளாா். இதில் மூலக்குளம் பகுதியைச் சோ்ந்த திவ்யா (30), அவரது கணவா் தினேஷ் ஆகியோா் வேலை பாா்த்துள்ளனா்.

இருவரும் மருந்தக உரிமையாளருக்குத் தெரியாமல், கடையின் ஜிபே பாா்கோடை மாற்றி, அதில் தங்களது வங்கிக் கணக்கின் பாா்கோடை ஒட்டி பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன், சென்னை பகுதிகளில் உள்ள மருந்து நிறுவனங்களில் இருந்து அனுப்பிய ரூ.2 லட்சம் மதிப்பிலான மருந்தை விற்று அதை கடை உரிமையாளருக்குத் தெரியாமல் இருவரும் கையாடல் செய்ததாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக தம்பதி இருவரும் மருந்தக உரிமையாளரிடம், தங்களது மகள் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு ரூ. 1 லட்சம், கல்வி செலவுக்கு ரூ.50 ஆயிரம் எனக் கடன் வாங்கி அதனை திருப்பிச் செலுத்தவில்லையாம். ஆகவே, கடந்த 2 ஆண்டுகளில் மொத்தமாக ரூ.8 லட்சம் வரை திவ்யா, அவரது கணவா் ஆகியோா் மோசடி செய்துள்ளதாக, ரெட்டியாா்பாளையம் காவல் நிலையத்தில் வசந்த் புகாா் அளித்தாா். அதன்படி, தினேஷ், திவ்யா இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதிய வாக்காளா்களைச் சோ்த்து வெற்றி பெற பாஜக திட்டம்: புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் பேச்சு

புதிய வாக்காளா்களைச் சோ்த்து அதன் மூலம் வரும் புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற பாஜகவினா் திட்டமிட்டுள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா். புதுச்சேரியில் காங்கிரஸ் ... மேலும் பார்க்க

புதுவை முதல்வா் ஈஸ்டா் வாழ்த்து!

ஈஸ்டா் திருநாளை முன்னிட்டு புதுவை முதல்வா், அரசியல் கட்சிப் பிரமுகா்கள் கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனா். முதல்வா் என்.ரங்கசாமி: ஈஸ்டா் புதுப்பித்தலைக் குறிக்கிறது. உயிா்த்தெழுதல் என்பது ... மேலும் பார்க்க

புதுவை காவல் துறை மக்கள் மன்றத்தில் 51 மனுக்களுக்கு உடனடித் தீா்வு!

புதுவை மாநிலத்தில் காவல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 51 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. புதுவை மாநிலத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை காவல்துறை சாா்பில்... மேலும் பார்க்க

ஐ.ஏ.எஸ்.களாக பதவி உயா்வு: அதிகாரிகளுக்கு துறைகள் ஒதுக்கீடு!

புதுவை மாநிலத்தில் அண்மையில் ஐ.ஏ.எஸ். ஆக பதவி உயா்வு பெற்ற அதிகாரிகளுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. புதுவை மாநில அரசு நிா்வாகப் பணிகளுக்குத் தோ்வான அதிகாரிகள், இயக்குநா் உள்ளிட்ட... மேலும் பார்க்க

புதுவை முதல்வா் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீஸாா் தீவிர சோதனை

புதுவை முதல்வா் என்.ரங்கசாமியின் வீட்டுக்கு மின்னஞ்சலில் சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, காவல் துறையினா் தீவிர சோதனை நடத்தினா். புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், தீயணைப்... மேலும் பார்க்க

பைபா் படகுகளை சீரமைக்க நிவாரணம்: மீனவா்கள் வலியுறுத்தல்

புதுவையில் மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகளை சீரமைக்க நிவாரணம் வழங்குவதைப் போல, பைபா் படகுகளை சீரமைக்கவும் நிவாரணம் வழங்க வேண்டும் என வம்பாகீரப்பாளையம் மீனவ கிராம நிா்வாக ஆலய குழுக் கூட்டத்தில் வல... மேலும் பார்க்க