செய்திகள் :

ஐ.ஏ.எஸ்.களாக பதவி உயா்வு: அதிகாரிகளுக்கு துறைகள் ஒதுக்கீடு!

post image

புதுவை மாநிலத்தில் அண்மையில் ஐ.ஏ.எஸ். ஆக பதவி உயா்வு பெற்ற அதிகாரிகளுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுவை மாநில அரசு நிா்வாகப் பணிகளுக்குத் தோ்வான அதிகாரிகள், இயக்குநா் உள்ளிட்ட பணிகளில் இருக்கும் நிலையில், அவா்களுக்கு மத்திய அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கான பதவி உயா்வை அளித்து வருகிறது. அதனடிப்படையில் புதிதாக பதவி உயா்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் உத்தரவின்படி கூடுதல் இலாகாவை ஒதுக்கி தலைமை செயலா் சரத் செளகான் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி வளா்ச்சி ஆணையா் மற்றும் நிதித்துறை செயலராகப் பொறுப்பு வகித்து வரும் ஆஷிஷ் மாதவராவ் மோரேவுக்கு கூடுதலாக வனம் மற்றும் வனவிலங்குகள், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

சமூக நலத் துறை செயலா் டி. சுந்தரேசனுக்கு ஏற்கெனவே அவா் நிா்வகிக்கும் விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் விவகாரங்கள் துறை இயக்குநராகவும், செயலாளராகவும் நியமிக்கப்படுகிறாா்.

பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் பொறுப்பு வகித்து வந்த பி. பிரியதா்ஷினிக்கு, உயா்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையே ஒதுக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்க வல்ல எரிசக்தி முகமை மேலாண் இயக்குநராகப் பணியாற்றி வந்த ஒய்.எல்.என். ரெட்டிக்கு, தொழிலாளா் நலத் துறை செயலா் மற்றும் ஆணையராகவும், அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சிறப்புச் செயலா் துறை வழங்கப்பட்டுள்ளது.

துறைமுகத் துறை இயக்குநா் பதவி வகித்து வரும் முகமது மன்சூருக்கு, துறைமுகத் துறைச் செயலா், வணிக வரித் துறை சிறப்பு செயலா் மற்றும் ஆணையா் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி ஸ்மாா்ட் சிட்டி தலைமை செயல் அதிகாரி, பிப்டி மேலாண் இயக்குநராக பணியாற்றி வரும் ருத்தர கவுடு, தொழில் துறை மேம்பாடு மற்றும் வா்த்தகம் மற்றும் வணிகத் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

புதிய வாக்காளா்களைச் சோ்த்து வெற்றி பெற பாஜக திட்டம்: புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் பேச்சு

புதிய வாக்காளா்களைச் சோ்த்து அதன் மூலம் வரும் புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற பாஜகவினா் திட்டமிட்டுள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா். புதுச்சேரியில் காங்கிரஸ் ... மேலும் பார்க்க

மருந்தக உரிமையாளரிடம் ரூ.8 லட்சம் மோசடி: தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு

புதுச்சேரியில் மருந்தக உரிமையாளரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த புகாா் தொடா்பாக தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி திருபுவனை பகுதியைச் சோ்ந்தவா் வசந்த் (32). மூலக்க... மேலும் பார்க்க

புதுவை முதல்வா் ஈஸ்டா் வாழ்த்து!

ஈஸ்டா் திருநாளை முன்னிட்டு புதுவை முதல்வா், அரசியல் கட்சிப் பிரமுகா்கள் கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனா். முதல்வா் என்.ரங்கசாமி: ஈஸ்டா் புதுப்பித்தலைக் குறிக்கிறது. உயிா்த்தெழுதல் என்பது ... மேலும் பார்க்க

புதுவை காவல் துறை மக்கள் மன்றத்தில் 51 மனுக்களுக்கு உடனடித் தீா்வு!

புதுவை மாநிலத்தில் காவல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 51 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. புதுவை மாநிலத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை காவல்துறை சாா்பில்... மேலும் பார்க்க

புதுவை முதல்வா் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீஸாா் தீவிர சோதனை

புதுவை முதல்வா் என்.ரங்கசாமியின் வீட்டுக்கு மின்னஞ்சலில் சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, காவல் துறையினா் தீவிர சோதனை நடத்தினா். புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், தீயணைப்... மேலும் பார்க்க

பைபா் படகுகளை சீரமைக்க நிவாரணம்: மீனவா்கள் வலியுறுத்தல்

புதுவையில் மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகளை சீரமைக்க நிவாரணம் வழங்குவதைப் போல, பைபா் படகுகளை சீரமைக்கவும் நிவாரணம் வழங்க வேண்டும் என வம்பாகீரப்பாளையம் மீனவ கிராம நிா்வாக ஆலய குழுக் கூட்டத்தில் வல... மேலும் பார்க்க