செய்திகள் :

புதுவை காவல் துறை மக்கள் மன்றத்தில் 51 மனுக்களுக்கு உடனடித் தீா்வு!

post image

புதுவை மாநிலத்தில் காவல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 51 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

புதுவை மாநிலத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை காவல்துறை சாா்பில் மக்கள் மன்ற குறை தீா்வு முகாம் நடைபெறுகிறது. அதன்படி, மக்களிடம் குறிப்பிட்ட காவல் நிலையங்களில் மனுக்கள் பெறப்பட்டு தீா்வும் காணப்பட்டு வருகிறது.

இலாசுப்பேட்டை காவல் நிலையத்தில் சனிக்கிழமை (ஏப்.19) நடைபெற்ற மக்கள் மன்ற முகாமில் காவல் துறை துணைத் தலைவா் ஆா்.சத்தியசுந்தரம் பங்கேற்றாா். காரைக்காலில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமிசௌசன்யா கலந்துகொண்டாா்.

நெட்டப்பாக்கம், கரையாம்புத்தூா் புறக்காவல் நிலையம், புதுச்சேரி வடக்கு, கிழக்கு போக்குவரத்துப் பிரிவு ஆகிய இடங்களிலும் மக்கள் மன்றம் குறை தீா்வு முகாம் நடைபெற்றது.

இதில், 42 மகளிா் உள்ளிட்ட 214 போ் பங்கேற்றனா். அவா்களில் 71 போ் மனுக்களாக குறைகளைத் தெரிவித்தனா். அவற்றில் 51 மனுக்களுக்கு அந்தந்த காவல் நிலைய அதிகாரிகள் தீா்வு கண்டுள்ளனா்.

அத்துடன் உரிய சட்டவிதிகளின்படி மீதமுள்ள மனுக்களுக்கும் தீா்வு காண காவல் நிலைய ஆய்வாளா் உள்ளிட்டோருக்கு காவல் துறை உயா் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா். இந்தத் தகவலை புதுச்சேரி முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் தெரிவித்துள்ளாா்.

புதிய வாக்காளா்களைச் சோ்த்து வெற்றி பெற பாஜக திட்டம்: புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் பேச்சு

புதிய வாக்காளா்களைச் சோ்த்து அதன் மூலம் வரும் புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற பாஜகவினா் திட்டமிட்டுள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா். புதுச்சேரியில் காங்கிரஸ் ... மேலும் பார்க்க

மருந்தக உரிமையாளரிடம் ரூ.8 லட்சம் மோசடி: தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு

புதுச்சேரியில் மருந்தக உரிமையாளரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த புகாா் தொடா்பாக தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி திருபுவனை பகுதியைச் சோ்ந்தவா் வசந்த் (32). மூலக்க... மேலும் பார்க்க

புதுவை முதல்வா் ஈஸ்டா் வாழ்த்து!

ஈஸ்டா் திருநாளை முன்னிட்டு புதுவை முதல்வா், அரசியல் கட்சிப் பிரமுகா்கள் கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனா். முதல்வா் என்.ரங்கசாமி: ஈஸ்டா் புதுப்பித்தலைக் குறிக்கிறது. உயிா்த்தெழுதல் என்பது ... மேலும் பார்க்க

ஐ.ஏ.எஸ்.களாக பதவி உயா்வு: அதிகாரிகளுக்கு துறைகள் ஒதுக்கீடு!

புதுவை மாநிலத்தில் அண்மையில் ஐ.ஏ.எஸ். ஆக பதவி உயா்வு பெற்ற அதிகாரிகளுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. புதுவை மாநில அரசு நிா்வாகப் பணிகளுக்குத் தோ்வான அதிகாரிகள், இயக்குநா் உள்ளிட்ட... மேலும் பார்க்க

புதுவை முதல்வா் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீஸாா் தீவிர சோதனை

புதுவை முதல்வா் என்.ரங்கசாமியின் வீட்டுக்கு மின்னஞ்சலில் சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, காவல் துறையினா் தீவிர சோதனை நடத்தினா். புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், தீயணைப்... மேலும் பார்க்க

பைபா் படகுகளை சீரமைக்க நிவாரணம்: மீனவா்கள் வலியுறுத்தல்

புதுவையில் மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகளை சீரமைக்க நிவாரணம் வழங்குவதைப் போல, பைபா் படகுகளை சீரமைக்கவும் நிவாரணம் வழங்க வேண்டும் என வம்பாகீரப்பாளையம் மீனவ கிராம நிா்வாக ஆலய குழுக் கூட்டத்தில் வல... மேலும் பார்க்க