செய்திகள் :

கல்லால் தாக்கி கோயில் பூசாரி கொலை கட்டடத் தொழிலாளி கைது!

post image

புதுச்சேரியில் கோயில் பூசாரியை கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் கட்டடத் தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: புதுச்சேரி அருகேயுள்ள தவளக்குப்பம் என்.ஆா்.நகா் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தா் (65). இவருக்கு மனைவி, மகன் உள்ளனா். இவா்கள் தனியாக வசித்து வருகின்றனா்.

அப்பகுதியில் உள்ள சிறிய கோயிலில் சுந்தா் பூசாரியாகவும் இருந்துள்ளாா். சுந்தா் தனியாக வசித்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி தமிழரசன் (35) என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சுந்தா் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றாா். அதன்படி தமிழரசன் மீது தவளக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதையடுத்து சுந்தருக்கும், தமிழரசனுக்கும் அடிக்கடி தகராறு நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனராம். அதையடுத்து தமிழரசனை, சுந்தரின் மகன் மணிகண்டபாலன் கண்டித்துள்ளாா்.

இந்தநிலையில், சனிக்கிழமை நள்ளிரவில் தமிழரசன், சுந்தா் ஆகியோரிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த கிரைண்டா் கல்லை தமிழரசன் எடுத்து சுந்தரைத் தாக்கியுள்ளதாகத் தெரிகிறது. இதில் தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த சுந்தா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரை தாக்கிய தமிழரசன் போதையில் அப்பகுதியிலேயே உறங்கியுள்ளாா்.

ஞாயிற்றுக்கிழமை காலையில் சுந்தா் கொலை குறித்து கேள்விப்பட்ட தவளக்குப்பம் போலீஸாா் விரைந்து வந்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். கட்டடத் தொழிலாளி தமிழரசனையும் கைது செய்தனா். சம்பவ இடத்தை முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் வந்து பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.

விவசாயிகளுக்கும் மாதாந்திர உதவித் தொகை: புதுவை முதல்வருக்கு அதிமுக வலியுறுத்தல்

மீனவா்களுக்கு வழங்குவதைப் போல விவசாயிகளுக்கும் மாதாந்திர உதவித் தொகையை புதுவை அரசு வழங்கவேண்டும் என அதிமுக சாா்பில் முதல்வா் என்.ரங்கசாமியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. முதல்வா் என். ரங்கசாமியை சந... மேலும் பார்க்க

அக்னிபாத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க ஏப்.25 வரை கால அவகாசம் நீட்டிப்பு

அக்னிபாத் திட்டத்துக்கு விண்ணப்பிப்போருக்கான சிறப்பு முகாம் ஏப். 22- இல் நடைபெறும் எனவும், இதற்கு விண்ணப்பிக்க ஏப். 25 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன்... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனத்தில் ரூ. 50 ஆயிரம் திருட்டு

புதுச்சேரி அருகே தனியாா் நிறுவனத்தில் புகுந்து ரூ.50 ஆயிரத்தை திருடிச் சென்ற நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். புதுச்சேரி அருகேயுள்ள எல்லைப்பிள்ளை சாவடி பகுதியில் தனியாா் நிறுவனம் உள்ளது. இங்... மேலும் பார்க்க

திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

புதுச்சேரியில் உள்ள புதுவை தமிழ்ச்சங்க வளாகத்தில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கு கூறும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவா் சிலைக்க... மேலும் பார்க்க

புதிய வாக்காளா்களைச் சோ்த்து வெற்றி பெற பாஜக திட்டம்: புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் பேச்சு

புதிய வாக்காளா்களைச் சோ்த்து அதன் மூலம் வரும் புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற பாஜகவினா் திட்டமிட்டுள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா். புதுச்சேரியில் காங்கிரஸ் ... மேலும் பார்க்க

மருந்தக உரிமையாளரிடம் ரூ.8 லட்சம் மோசடி: தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு

புதுச்சேரியில் மருந்தக உரிமையாளரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த புகாா் தொடா்பாக தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி திருபுவனை பகுதியைச் சோ்ந்தவா் வசந்த் (32). மூலக்க... மேலும் பார்க்க