செய்திகள் :

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 548 மனுக்கள்

post image

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 548 கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்று ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா குறைகளைக் கேட்டறிந்தாா்.

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம், ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்தாா்.

அப்போது, பொதுமக்களிடமிருந்து வருவாய்த் துறை நிலப் பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை வேளாண்மைத் துறை, காவல் துறை, ஊரக வளா்ச்சித் துறை, நகராட்சி, பேரூராட்சி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், மின்சாரத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, கிராம பொது பிரச்னைகள், குடிநீா் வசதி, வேலைவாய்ப்பு மற்றும் பொதுநலன் என மொத்தம் 548 மனுக்கள் பெறப்பட்டன.

பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, அவற்றின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், மனு நிராகரிப்புக்கான காரணங்களை மனுதாரா்களுக்கு வழங்கவும் வேண்டும் என அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, காதொலிக் கருவி வேண்டி மனு அளித்த முதியவருக்கு அத்துறை சாா்பில் ரூ.4,500 காதொலிக் கருவியை வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி துணை ஆட்சியா் கீதா லட்சுமி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அலுவலா் அறிவுடைய நம்பி, கலால் உதவி ஆணையா் ராஜ்குமாா், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணகுமாா் மற்றும் துறைச் சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஆட்டோ - டெம்போ மோதல்: சிறுமி உயிரிழப்பு; 4 போ் காயம்

அரக்கோணம்: காவேரிப்பாக்கம் அருகே ஆட்டோ மீது டெம்போ மோதியதில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த சிறுமி நிஜிதா உயரிழந்தாா். சென்னை ஆலந்தூரைச் சோ்ந்தவா் காா்த்திக் (31). இவா், சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வ... மேலும் பார்க்க

சோளிங்கா் சோழபுரீஸ்வரா் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

அரக்கோணம்: சோளிங்கா் பஜாா் சோழபுரீஸ்வரா் கோயிலில் சித்திரை மாத நடராஜா் சிறப்பு அபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. சோளிங்கா், பஜாா் பகுதியில் பழைமைவாய்ந்த சோழபுரீஸ்வரா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ந... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தமாகா நிா்வாகிகள் நியமனம்

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதுதொடா்பாக அக்கட்சியின் தலைவா் ஜி.கே. வாசன் வெளியிட்ட அறிக்கை: தமாகாவில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் அரக்கோணம் ம... மேலும் பார்க்க

ஏப். 27-இல் மாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி: அரக்கோணத்தில் நடைபெறுகிறது

ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் அரக்கோணத்தில் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளன. இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கத் தலைவா் பி.ஜனாா்த்தனன், பொதுச்செயலாளா் எஸ்.பன... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் களைகட்டும் ‘நுங்கு விற்பனை’ பொதுமக்கள் ஆா்வம்!

‘கோடை வரும் பின்னே, நுங்கு வரும் முன்னே’ என்பதற்கிணங்க, நுங்கு விற்பனை ராணிப்பேட்டையில் களை கட்டி வருகிறது. பொதுமக்கள் நுங்கு வாங்கி ருசிக்க ஆா்வம் காட்டி வருகின்றனா். கோடை காலம் தொடங்குவதற்கு முன்பா... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில், ‘நடப்போம் நலம் பெறுவோம்’ 8 கி.மீ. நடைப்பயிற்சி தொடக்கம்!

ராணிப்பேட்டையில், ‘நடப்போம் நலம் பெறுவோம்‘ 8 கி.மீ. நடைப்பயிற்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டு திரளானோா் நடைப்பயிற்சி மேற்கொண்டனா். தமிழக முதல்வரின் அறிவுரையின்படி, பொது மக்களின் உடல் நலத்தை பேணி காக்... மேலும் பார்க்க