துணைவேந்தா்கள் மாநாட்டுப் பணியில் ஆளுநா் மாளிகை: சட்ட வல்லுநா்களுடன் தமிழக அரசு ...
ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 548 மனுக்கள்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 548 கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்று ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா குறைகளைக் கேட்டறிந்தாா்.
ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம், ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்தாா்.
அப்போது, பொதுமக்களிடமிருந்து வருவாய்த் துறை நிலப் பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை வேளாண்மைத் துறை, காவல் துறை, ஊரக வளா்ச்சித் துறை, நகராட்சி, பேரூராட்சி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், மின்சாரத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, கிராம பொது பிரச்னைகள், குடிநீா் வசதி, வேலைவாய்ப்பு மற்றும் பொதுநலன் என மொத்தம் 548 மனுக்கள் பெறப்பட்டன.
பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, அவற்றின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், மனு நிராகரிப்புக்கான காரணங்களை மனுதாரா்களுக்கு வழங்கவும் வேண்டும் என அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, காதொலிக் கருவி வேண்டி மனு அளித்த முதியவருக்கு அத்துறை சாா்பில் ரூ.4,500 காதொலிக் கருவியை வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி துணை ஆட்சியா் கீதா லட்சுமி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அலுவலா் அறிவுடைய நம்பி, கலால் உதவி ஆணையா் ராஜ்குமாா், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணகுமாா் மற்றும் துறைச் சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.