செய்திகள் :

ஆணாதிக்கம், ஆபாசம், கொச்சைப் பேச்சு... ஒரு பொன்முடி சிக்கிவிட்டார். ஆனால், அவர்... இவர்?

post image

பெண்களை மட்டம்தட்டிப் பேசுவது, வீடுகளில் காமெடி ஆக்கப்பட்டிருக்கிறது. பெண்களை ஆபாசமாகப் பேசுவது, மேடைகளில் காமெடி ஆக்கப்பட்டிருக்கிறது. அப்படித்தான், சமீபத்தில் தனது `நகைச்சுவை உணர்வை’ மேடையில் அள்ளி வீசியிருக்கிறார், ‘மாண்புமிகு’ தமிழ்நாட்டு அமைச்சர், `பேராசிரியர்’ க.பொன்முடி.

பாலியல் தொழிலாளிக்கும் அவரிடம் சென்றவருக்கும் நடந்ததாக அவர் பகிர்ந்த கற்பனை உரையாடல், ஆபாசத்தின் உச்சம். முன்னதாக, `கூட்டத்தில் இருக்கும் பெண்கள் தவறாக நினைக்க வேண்டாம்’ என்று பீடிகை வேறு போட்டுக்கொண்டார்.

அரசியல் மேடைதான் என்றில்லை... திரைப்பட, இலக்கிய, பட்டிமன்ற, தெருவீதி என பற்பல மேடைகளிலும் இதுபோன்ற பெண் வெறுப்பு, ஆபாச பேச்சுகளால் கூட்டத்தில் உள்ளவர்களின் மனங்களில் உள்ள கேவலமான எண்ணங்களைத் தூண்டிவிட்டுக் கைத்தட்டல் வாங்குகிற கீழ்த்தரமான பிழைப்பு, காலங்காலமாகத் தொடர்கிறது. கட்சிப் பேச்சாளர்கள், தலைவர்கள், அமைச்சர்கள், திரைப்படத்துறையினர், இலக்கியவாதிகள் எனப் பலரும் ஆணாதிக்கம், ஆபாசம், நடத்தைக்கொலை, உருவகேலி என்றே பேசுகிறார்கள், பெண்களை.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவில் ஆரம்பித்து, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ஜோதிமணி, அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் குஷ்பூ, காளியம்மாள் வரை... ஒவ்வொரு பெண்ணும் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியின் எதிரிக் கட்சிகளின் தொண்டர்கள், குண்டர்கள், பேச்சாளர்கள், தலைவர்களின் பெண் வெறுப்புத் தாக்குதல்களை எதிர்கொண்டவர்களே.

நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த பாலியல் வழக்கு குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘உனக்கு வேற பொம்பளை கிடைக்கலையானு என் மனைவி கேட்டா’ என்று அத்தனை மைக்குகளுக்கு முன் சொன்னது, பேரதிர்ச்சி.

எதிரியின் `ஆண்மை’யை இழிவுபடுத்த, பேச்சாளர்களும், சினிமா கதாபாத்திரங்களும் எடுக்கும் பிரம்மாஸ்திரம், ‘ஆம்பளையா இருந்தா வாடா..’, ‘டேய் பொட்ட’, ‘போய் புடவை கட்டிக்கோ, பூ வெச்சுக்கோ’ என்பது போன்ற வசனங்களைத்தான். பலரும் திட்டமிட்டே இந்த வேலைகளைச் செய்து வருகின்றனர்.

பொன்முடி அரசியல்வாதி என்பது மட்டுமல்லாமல், மதத்தையும் சேர்த்து இழிவுபடுத்திவிட்டதால், ‘பேராபத்தில்’ சிக்கிவிட்டார். இல்லையென்றால், ‘பொம்பளையத்தானே திட்டினான்’ என்றே சீமான் போன்றவர்களை எளிதாகக் கடந்தது போல, இந்த ஆணாதிக்கச் சமூகமும், லாவணிக்காக மட்டுமே பெண்ணுரிமை பேசும் அரசியல்வாதிகளும், எப்போதாவது விழித்துக்கொள்ளும் நீதிமன்றமும் வழக்கம்போல கடந்திருக்கும்.

ஆனால், பெண்களை இழிவுபடுத்திவிட்டு ஒருவர்கூட தப்பிவிடக் கூடாது என்பதுதான் முக்கியம். தேவையானபோது... தேவையானவர்களுக்கு மட்டும் எதிர்ப்புத் தெரிவிப்பவர்களைப் போல் அல்லாமல்... பெண்கள் இழிவுபடுத்தப்படும்போதெல்லாம் கடுமையான எதிர்வினை ஆற்ற வேண்டியது முக்கியம் தோழிகளே.

ஆம், இன்றைக்கு இவர்களெல்லாம் இதைப் பற்றி கொஞ்சம்போல பேசுவதற்குக் காரணமே... நாமெல்லாம் களமாட ஆரம்பித்ததுதான். கொஞ்சம்போல மாற்றியிருக்கிறோம்... முழுமையாக மாற்றுவதற்கு தொடர்ந்து களமாடுவோம்!

இந்தி திணிப்பு: "மகாராஷ்டிராவில் அஞ்சும் பட்னாவிஸ்; மோடி பதிலளிக்க வேண்டும்" - ஸ்டாலின் ட்வீட்!

புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தி திணிக்கப்பட்டதாக, கடும் எதிர்ப்புகள் கிளம்பின.பின்னர், "மும்மொழிக் கொள்கையின்படி மாணவர்கள் கற்றுக்கொள்ளும் மூன்றில் இரண்டு மொழிகள் இ... மேலும் பார்க்க

Adyar park: சுட்டிக்காட்டிய விகடன்; பயன்படுத்த முடியாத நிலையிலிருந்த பூங்காவை சீரமைக்கும் அதிகாரிகள்

சென்னை அடையாறு, இந்திரா நகரில் (வார்டு 170 , மண்டலம் 13 ,பகுதி 40 ) அமைந்துள்ளபெருநகர மாநகராட்சி பூங்காவில் உள்ள சிறுவர் விளையாட்டு திடலில் இருக்கும் விளையாட்டு உபகரணங்கள் ஒன்று கூட பயன்படுத்தும் நிலை... மேலும் பார்க்க

"கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும்" - உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து CPIM மேல்முறையீடு!

தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் வைத்துள்ள கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. பெ.... மேலும் பார்க்க

Pope: 'அடுத்த போப் யார்? - தேர்வு முறை எப்படி நடக்கும் தெரியுமா? - சுவாரஸ்ய தகவல்கள்!

கத்தோலிக்க திருச்சபையின் 266-வது போப்பாகவும், வாட்டிக்கன் நகரத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். அவருக்குப் பிறகு அடுத்த போப் யார்? என்ற கேள்வி எழுகி... மேலும் பார்க்க

வருவாய்த்துறை அதிகாரியை மிரட்டிய வழக்கு; காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுக்கு சிறைத் தண்டனை விதித்த கோர்ட்!

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பவர் ராஜேஷ்குமார். இவர் காங்கிரஸ் இளைஞராணி மாவட்ட தலைவர், காங்கிரஸ் மாவட்ட தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துவந்தார். கருங்கல் ... மேலும் பார்க்க

Vande Bharat: `வழக்கமான என்ஜின்களை விட இலகுவாக இருக்கிறது' - ரயில்வே பாதுகாப்பு ஆணைய அறிக்கை

'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட, இந்திய ரயில்வேயின்முதன்மை ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்,கால்நடைகள்மோதும்போதுகூட கடுமையான விபத்துகளுக்கு ஆளாகிறது என ரயில்வே பாதுகாப்பு அறிக்கை தெரிவ... மேலும் பார்க்க