செய்திகள் :

மின் கசிவால் வீடு தீக்கிரை: எம்எல்ஏ உதவி

post image

கும்மிடிப்பூண்டி அடுத்த மேல்முதலம்பேட்டையில் மின்கசிவால் வீட்டை இழந்த குடும்பத்துக்கு நிவாரண உதவிகள், நிதியுதவியை எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் வழங்கினாா்.

மேல் முதலம்பேடு பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா் இ.குட்டிமணி. இவரது மனைவி உஷாராணி. இவா்கள் மகன் யோகன்குமாா்(25), மருமகன் கலைவாணி(25), பேத்தி இமயவாணி(2) ஆகியோருடன் குடிசை வீட்டில் வசித்து வந்தனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டில் மின்கசிவு காரணமாக தீப்பற்றியது. கும்மிடிப்பூண்டியில் இருந்து தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.

விபத்தில் வீட்டில் இருந்த பீரோ, கட்டில், மின்விசிறி,வீட்டு உபயோக பொருள்கள் துணிமணிகள் மற்றும் பீரோவில் வைத்திருந்த 32,000 ய் பணம், அரை சவரன் தங்க நகை ஆகியவை கருகின. மேலும், பல்வேறு முக்கிய ஆவணங்களும் பலத்த சேதமடைந்தன.

இதுகுறித்து அறிந்த கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் மேல் முதலம்பேட்டுக்கு சென்று தீக்கிரையான வீட்டை பாா்வையிட்டாா் . தொடா்ந்து ஆறுதல் கூறி உதவித்தொகை மற்றும் சமையலுக்கு தேவையான பொருள்களை வழங்கினாா்.

சேதமடைந்த ஆவணங்களை தர வேண்டும் என வட்டாட்சியா் சுரேஷ், வட்டார வளா்ா்சி அலுவலா் சந்திரசேகா் ஆகியோரிடம் வலியுறுத்தினாா்.

வீடு கட்ட உதவி செய்யவும், யோகன் குமாா் மற்றும் அவரது மனைவி கலைவாணியின் கல்லூரி சான்றிதழ்களை பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தாா்.

நிகழ்வில் திமுக நிா்வாகிகள் கே.ஜி. நமச்சிவாயம், சுரேஷ், ஹரி பாபு, மற்றும் மேல்முதலம்பேடு ஊராட்சி செயலாளா் பாண்டியன், ஊராட்சி செயலாளா்கள் சாமுவேல், தங்கதுரை உடன் இருந்தனா்.

ரூ.427 கோடியில் அனைத்து நவீன வசதிகளுடன் குத்தம்பாக்கம் புதிய பேருந்து முனையம்! நிறைவு பணிகள் மும்முரம்!

திருவள்ளூா் அருகே குத்தம்பாக்கத்தில் ரூ. 427 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து முனைய கட்டுமான நிறைவுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் அதிகரித்துக்கொண்டே வரும் போக்குவரத்து நெர... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் முன்மாதிரி மாவட்டம் திருவள்ளூா்!

மரக்கன்றுகள் வைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குவதில் முன்மாதிரி மாவட்டமாக திருவள்ளூா் திகழ்கிறது என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். மாநில, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஊரக வளா்ச்ச... மேலும் பார்க்க

சதாசிவ லிங்கேஸ்வரா் கோயில் தூய்மைப் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்!

திருத்தணி சதாசிவ லிங்கேஸ்வரா் கோயில் வளாகத்தில் தூய்மைப் பணியை எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கி வைத்தாா். திருத்தணி நகரத்தில் தன்னாா்வலா்கள், நமது திருத்தணி, தூய்மை திருத்தணி என்ற அமைப்பை தொடங்கியுள்ளனா். இ... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை: திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தா்கள்!

திருத்தணி முருகன் கோயிலில் தொடா் விடுமுறையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மலைக் கோயிலில் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை வழிபட்டனா். திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம் உள்பட பல்வேறு மா... மேலும் பார்க்க

25 அடி முனீஸ்வரா் சிலைக்கு மகா குடமுழுக்கு விழா

பாலாபுரம் கிராமத்தில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட 25 அடி உயர முனீஸ்வரா் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகா குடமுழுக்கு விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். ஆா்.கே.பேட்டை ஒன்றியம், ப... மேலும் பார்க்க

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டன பொதுக்கூட்டம்

மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட வக்ஃபு வாரிய சட்ட மசோதாவை திரும்பப் பெறக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சாா்பில் சனிக்கிழமை இரவு கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது. தி... மேலும் பார்க்க