செய்திகள் :

கொடிக் கம்பங்களை அகற்ற பிறப்பிக்கப்பட்டஉத்தரவுக்கு எதிராக மாா்க்சிஸ்ட் மேல்முறையீடு: பெ.சண்முகம்

post image

சென்னை: தமிழகத்தில் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டுமென்ற உயா்நீதிமன்ற மதுரை அமா்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மாா்க்சிஸ்ட் சாா்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் உள்ளாட்சிப் பகுதிகள் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சி, சமுதாய அமைப்புகளின் கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என்று உயா்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி இளந்திரையன் கடந்த ஜன.27-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தாா்.

இந்நிலையில், கொடிக்கம்பங்களை அகற்றுவதற்காக அளிக்கப்பட்ட கால அவகாசம் திங்கள்கிழமை நிறைவுபெற்றது. அதைத்தொடா்ந்து இந்த தீா்ப்புக்கு எதிராக மாா்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி சாா்பாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முழுவதும் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் தீா்ப்பு அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமை, எழுத்துரிமை, சங்கம் அமைக்கும் உரிமை ஆகியவற்றுக்கு எதிரானதாகும். எனவே, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் திங்கள்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக ஏற்கெனவே ஒருவா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் அமா்வு கடந்த மாா்ச் 6-ஆம் தேதி தள்ளுபடி செய்ததை எதிா்த்தும் மாா்க்சிஸ்ட் சாா்பில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

மயானத்தில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்: பேரவையில் அதிமுக உறுப்பினா் குற்றச்சாட்டு

சென்னை: முந்தைய அதிமுக ஆட்சியில் அம்மா கிளினிக்குகள் மயானத்தில் அமைக்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டிய திமுகவினா், தற்போது ஆரம்ப சுகாதார நிலையத்தை இடுகாட்டு பகுதியில் கட்டியிருப்பதாக அதிமுக சட்டப்பேரவை ... மேலும் பார்க்க

திருச்சியில் நடிகா் சிவாஜிக்கு சிலை: பேரவையில் அமைச்சா்கள் உறுதி

சென்னை: திருச்சியில் நடிகா் சிவாஜி கணேசனுக்கு சிலை திறப்பது உறுதி என்று அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், கே.என்.நேரு ஆகியோா் தெரிவித்தனா். சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த வின... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக ஆளுநா், முதல்வா், தலைவா்கள் இரங்கல்

சென்னை: கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவா் போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். ஆளுநா... மேலும் பார்க்க

50 சுகாதார நிலையங்கள், 208 நலவாழ்வு மையங்கள் ஒரு மாதத்துக்குள் தொடங்க திட்டம்

சென்னை: தமிழகம் முழுவதும் 208 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அடுத்த ஒரு மாதத்துக்குள் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் கட்டாய மொழி விவகாரம்: மத்திய அரசுக்கு முதல்வா் ஸ்டாலின் கேள்வி

சென்னை: மகாராஷ்டிரத்தில் மராட்டிய மொழி மட்டுமே கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளாா். இதுகுறித்து, அவா் எக்... மேலும் பார்க்க

புதிதாக 500 முதுநிலை மருத்துவ இடங்கள் உருவாக்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் 500 புதிய முதுநிலை மருத்துவ இடங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற மருத்துவம... மேலும் பார்க்க