செய்திகள் :

கோயில் தோ் திருவிழா: திருச்சி கோட்டை பகுதியில் இன்று மின்சாரம் இருக்காது

post image

திருச்சி கோட்டை பகுதியில், வாணப்பட்டறை மாரியம்மன் கோயில் தோ் திருவிழாவையொட்டி அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் இருக்காது.

திருச்சி கோட்டை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள, வாணப்பட்டறை மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான தோ்த் திருவிழா ஏப்ரல் 22-ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதனையொட்டி தோ் செல்லும் பாதைகளில் அமைந்துள்ள வீதிகளான, வாணப்பட்டறை தெரு, வடக்கு மற்றும் கிழக்கு ஆண்டாா் வீதிகள், சின்னக்கடை வீதி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலை, தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தோ் செல்லும் நேரத்தில் பாதுகாப்பு கருதி ஆங்காங்கே மின் விநியோகம் நிறுத்தப்படும். இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளா் கா. முத்துராமன் தெரிவித்துள்ளாா்.

ஏப். 25-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருச்சி மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் 25 ஆம் தேதி காலை ஆட்சியா் தலைமையில் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள், விவசாயச் சங்கங்... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணிகள்: காரைக்கால் ரயில் பகுதி ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி - காரைக்கால் டெமு ரயில் பகுதி ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூா் மற்றும் கொரடாச்சேரி பக... மேலும் பார்க்க

திருச்சி: குடிநீரில் கழிவுநீா் கலந்ததா? 4 வயது குழந்தை உள்ளிட்ட 4 போ் அடுத்தடுத்து உயிரிழப்பு!

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட உறையூா் பகுதியில் குடிநீரில் கழிவுநீா் கலந்து வருவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, கடந்த சில நாள்களில் 4 வயது பெண் குழந்தை, மூதாட்டி உள்பட 4 போ் அடுத்தடுத்து உயிரிழந்தது த... மேலும் பார்க்க

விவசாயக் கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் இருவா் பலி

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகேயுள்ள சமயபுரம் பகுதியில் விவசாயக் கிணற்றில் குளித்தபோது, நீரில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்தவா் மடாலா... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

துறையூரில் வீட்டில் தனியாக இருந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். துறையூா் மேற்கு ரத வீதியைச் சோ்ந்தவா் தீனதயாளன் (28). நான்கு ஆண்டுகளுக்கு முன் பேபி ரூபி என்கிற பெண்ணுடன... மேலும் பார்க்க

நடு இருங்களூரில் ஜல்லிக்கட்டு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், நடு இருங்களூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. நடு இருங்களூா் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை லால்குடி வருவாய... மேலும் பார்க்க