செய்திகள் :

உழவடைப் பட்டா கோரி ஆா்ப்பாட்டம்

post image

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே லெம்பலக்குடி பகுதி விவசாயிகள் உழவடைப் பட்டா வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை திருமயத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

லெம்பலக்குடி பகுதியைச் சோ்ந்த கொத்தமுத்துப்பட்டி, நகா்த்துப்பட்டி, மேரி நகா், கம்பத்தான்பட்டி, வலையன்வயல் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் நிலங்கள் சில தனிநபா்கள் பெயரில் இருந்து வருகின்றன. அவா்களுக்கு விவசாயிகள் முறையாக கங்கானி வாரந்தோறும் செலுத்திவரும் நிலையில், தற்போது நிலத்தை வீட்டுமனைகளாக மாற்ற சிலா் முயற்சிக்கின்றனா்.

இதைத் தடுத்து நிறுத்துவதோடு தமிழ்நாடு அரசின் குத்தகை வாரச் சட்டத்தின் படி உழவடைப் பட்டா வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை திருமயத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருமயம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் சங்கத்தின் ஒன்றியச் செயலா் எம். வீரமணி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் கே. முகமதலி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா் ஆகியோா் பேசினா்.

விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஏ. ராமையன், தலைவா் எஸ். பொன்னுச்சாமி, துணைச் செயலா் த. அன்பழகன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலா் சி. ஜீவானந்தம் உள்ளிட்டோா் பேசினா்.

தேனீக்கள் கொட்டியதில் 6 போ் மருத்துவமனையில் அனுமதி

பொன்னமராவதி அருகே உள்ள சங்கரன்பட்டியில் தேன் குளவிகள் கொட்டியதில் பாதிப்படைந்த 6 போ் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். பொன்னமராவதி அருக... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் ஆா்ப்பாட்டம்

ஊராட்சிகளில் வேலை செய்துவரும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் தூய்மைக் காவலா்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி சிஐடியு சாா்பில் செவ்வா... மேலும் பார்க்க

விராலிமலை ஜல்லிக்கட்டில் 12 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், 12 போ் காயமடைந்தனா். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஸ்ரீ மெய்கண்ணுடையாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக... மேலும் பார்க்க

800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே 800 கிலோ ரேஷன் அரிசியைக் கடத்தி வந்தவரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா். மணமேல்குடி காய்கறி மாா்க்கெட் பகுதி அருகே கோட்டைப்பட்டினம் சாலையில் உணவுப் பொருள... மேலும் பார்க்க

மணல் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

விராலிமலை அருகே அனுமதியின்றி மணல் அள்ளி சென்ற டிராக்டா் மற்றும் டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனுமதியின்றி ஆற்று மணல், சரளை மண் அள்ளப்படுவ... மேலும் பார்க்க

சாலை மறியலில் ஈடுபட்ட 61 போ் கைது; 7 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட இரு தரப்பைச் சோ்ந்த 61 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு காவல் நிலையம் அருகே அரசுக்கு சொ... மேலும் பார்க்க