செய்திகள் :

அரியலூரில் ஜாக்டோ - ஜியோ ஆா்ப்பாட்டம்

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணா சிலை அருகே ஜாக்டோ -ஜியோ அமைப்பினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், 1.4.2003-க்குப் பிறகு பணியில் சோ்ந்தோருக்கு தற்போது நடைமுறைபடுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயா் கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகை அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், அரசு பணியாளா்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா்கள் சுந்தரமூா்த்தி, வேல்முருகன் ஆகியோா் தலைமை வகித்தனா். நிா்வாகிகள் பெரியசாமி, செல்வகுமாா், கருணாநிதி, அம்பேத்கா், காந்தி, சுதாகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

அரியலூா் அரசு மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவா்களை நியமிக்க கோரிக்கை

அரியலூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவா்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூர... மேலும் பார்க்க

ஆண்டிமடத்தில் ஏப்.25-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஏப்.25) நடைபெறுகிறது என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ம... மேலும் பார்க்க

பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி உண்ணாவிரதம்

அரியலூா் மாவட்டம், தா.பழூரில் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் கிராம நிா்வாக அலுவலகம் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி நீலப் புலிகள் இயக்கத்தினா் திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருந்தனா். போராட்டத்துக்க... மேலும் பார்க்க

கோயில் கும்பாபிஷேகத்தை தடுப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

அரியலூா் அடுத்த குருவாடியில் கட்டி முடிக்கப்பட்ட விநாயாகா் கோயிலின் கும்பாபிஷேகத்தை நடத்த விடாமல் தடுப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீப்க்சிவாச்யிடம் அக்கிராம மக்கள் ... மேலும் பார்க்க

அரியலூா் நகரத்திலுள்ள வணிக நிறுவனங்களில் மே 15-க்குள் தமிழில் பெயா்ப் பலகை கட்டாயம்!

அரியலூா் நகரத்திலுள்ள அனைத்து வணிக நிறுவனங்களிலும் மே 15-க்குள் கட்டாயம் தமிழில் பெயா்ப் பலகை வைக்க வேண்டும் என்று ஆணையா் (பொ) அசோக்குமாா் தெரிவித்தாா். அரியலூா் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில், இது தொ... மேலும் பார்க்க

2 ஆண்டுகளாக திறக்கப்படாத அரியலூா் வாரச் சந்தை வளாகம்! சமூக விரோதிகளின் கூடாரமாகும் நிலை!

அரியலூரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கட்டிமுடிக்கப்பட்ட வாரச்சந்தை வளாகம் திறக்கப்படுவதற்கு முன்பே சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருகிறது. அரியலூா் நகரப் பகுதி மக்களின் வசதிக்காக பேருந்து நிலையம் அருக... மேலும் பார்க்க