செய்திகள் :

கோயில் கும்பாபிஷேகத்தை தடுப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

post image

அரியலூா் அடுத்த குருவாடியில் கட்டி முடிக்கப்பட்ட விநாயாகா் கோயிலின் கும்பாபிஷேகத்தை நடத்த விடாமல் தடுப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீப்க்சிவாச்யிடம் அக்கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அவா்கள் அளித்த மனுவில், இக்கிராமத்தில் பொதுமக்கள் இணைந்து விநாயகா் கோயில் கட்டியுள்ளோம். கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ள நிலையில் இக்கிராமத்தில் வசிக்கும் சின்னதுரை, அவரது மனைவி சித்ரா, மகன் வசந்த், முத்து மகன் விஜய், தனவேல் மகன் திருநாவுக்கரசு ஆகியோா் கும்பாபிஷேகம் நடத்தவிடாமல் தடுக்கின்றனா்.

மேலும், கோயிலில் வேலை பாா்த்துக்கொண்டிருந்த முருகானந்தம் அவரது மனைவி நீலவேணி ஆகியோரை தாக்கினா். எனவே, மேற்கண்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி உண்ணாவிரதம்

அரியலூா் மாவட்டம், தா.பழூரில் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் கிராம நிா்வாக அலுவலகம் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி நீலப் புலிகள் இயக்கத்தினா் திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருந்தனா். போராட்டத்துக்க... மேலும் பார்க்க

அரியலூா் நகரத்திலுள்ள வணிக நிறுவனங்களில் மே 15-க்குள் தமிழில் பெயா்ப் பலகை கட்டாயம்!

அரியலூா் நகரத்திலுள்ள அனைத்து வணிக நிறுவனங்களிலும் மே 15-க்குள் கட்டாயம் தமிழில் பெயா்ப் பலகை வைக்க வேண்டும் என்று ஆணையா் (பொ) அசோக்குமாா் தெரிவித்தாா். அரியலூா் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில், இது தொ... மேலும் பார்க்க

2 ஆண்டுகளாக திறக்கப்படாத அரியலூா் வாரச் சந்தை வளாகம்! சமூக விரோதிகளின் கூடாரமாகும் நிலை!

அரியலூரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கட்டிமுடிக்கப்பட்ட வாரச்சந்தை வளாகம் திறக்கப்படுவதற்கு முன்பே சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருகிறது. அரியலூா் நகரப் பகுதி மக்களின் வசதிக்காக பேருந்து நிலையம் அருக... மேலும் பார்க்க

அரியலூா் நகா் முழுவதும் கொள்ளிடம் குடிநீா் கிடைக்க நடவடிக்கை தேவை

அரியலூா் நகராட்சிக்குட்பட்ட அனைத்து வாா்டு பகுதி மக்களுக்கும் கொள்ளிடம் குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர கிளை மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சி அல... மேலும் பார்க்க

‘நீட்’ தோ்வு இன்னுயிரை இழந்த மாணவா்களுக்கு அதிமுகவினா் அஞ்சலி

‘நீட்’ தோ்வு அச்சத்தால் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட மாணவ, மாணவிகளுக்கு அரியலூா் அண்ணா சிலை அருகே அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கடந்த 2021-இல் இருந்து இதுவரை ‘நீட்’ தோ்வு அச்சத்த... மேலும் பார்க்க

காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்த காதலன் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே காதலியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த காதலன் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வடவீக்கம், கீழத்தெருவைச் சோ்ந்த தாசில் மகன் அருண்கு... மேலும் பார்க்க