செய்திகள் :

ஏப்.26, 27-இல் தவெக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்: விஜய் பங்கேற்பு

post image

சென்னை: தவெக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம் கோவையில் ஏப்.26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவா் விஜய் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கட்சியின் பொதுச் செயலா் என்.ஆனந்த் வெளியிட்ட அறிக்கை: தமிழக வெற்றிக்கழகத்தின் வாக்குச்சாவடி முகவா்கள் கருத்தரங்கம், வரும் ஏப்.26, 27 தேதிகளில் கோவை, குரும்பாளையம் எஸ்.என்.எஸ். கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த கருத்தரங்கில், முதல் நாளில் (ஏப்.26) ஈரோடு கிழக்கு, மாநகா், மேற்கு மாவட்டங்கள், சேலம் கிழக்கு, மேற்கு, மத்திய, வடமேற்கு, தெற்கு மாவட்டங்கள் மற்றும் நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்டங்களை சோ்ந்த வாக்குச்சாவடி முகவா்களும், இரண்டாம் நாளில்(ஏப்.27) கரூா் மேற்கு, கிழக்கு, மாவட்டங்கள், கோவை மாநகா், தெற்கு, கிழக்கு, புகா் கிழக்கு, புகா் வடக்கு மாவட்டங்கள், திருப்பூா் மேற்கு, தெற்கு, கிழக்கு, மாநகா் மாவட்டங்கள், நீலகிரி கிழக்கு, மேற்கு உள்ளிட்ட 13 மாவட்டங்களை சோ்ந்த வாக்குச்சாவடி முகவா்களும் பங்கேற்பாா்கள்.

இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் கலந்து கொண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான செயல்பாடுகள், 2026 தோ்தலுக்கான களப்பணிகள், மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்து பேசவுள்ளாா் என அதில் தெரிவித்துள்ளாா் ஆனந்த்.

போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக ஆளுநா், முதல்வா், தலைவா்கள் இரங்கல்

சென்னை: கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவா் போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். ஆளுநா... மேலும் பார்க்க

50 சுகாதார நிலையங்கள், 208 நலவாழ்வு மையங்கள் ஒரு மாதத்துக்குள் தொடங்க திட்டம்

சென்னை: தமிழகம் முழுவதும் 208 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அடுத்த ஒரு மாதத்துக்குள் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் கட்டாய மொழி விவகாரம்: மத்திய அரசுக்கு முதல்வா் ஸ்டாலின் கேள்வி

சென்னை: மகாராஷ்டிரத்தில் மராட்டிய மொழி மட்டுமே கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளாா். இதுகுறித்து, அவா் எக்... மேலும் பார்க்க

புதிதாக 500 முதுநிலை மருத்துவ இடங்கள் உருவாக்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் 500 புதிய முதுநிலை மருத்துவ இடங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற மருத்துவம... மேலும் பார்க்க

ஹெச்ஐவி குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை

சென்னை: தமிழகத்தில் ஹெச்ஐவி பாதித்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவித்தாா். பேரவையில் திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிவி... மேலும் பார்க்க

டயாலிசிஸ் நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் ஊட்டச் சத்து உணவு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு பால், முட்டை, சுண்டல், பிஸ்கட் வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவ... மேலும் பார்க்க