செய்திகள் :

‘வந்தே பாரத்’ ரயில் பாதுகாப்பானது: தெற்கு ரயில்வே விளக்கம்

post image

சென்னை: ‘வந்தே பாரத்’ ரயில் கவச் பாதுகாப்பு அம்சத்துடன் பாதுகாப்பான முறையில் இயக்கப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

‘வந்தே பாரத்’ ரயிலின் முன்பகுதி மாடு மோதினால்கூட மோசமான விபத்தில் சிக்குவதாக மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டியிருந்தாா்.

இதற்கு விளக்கம் அளித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

‘வந்தே பாரத்’ ரயில் பாதுகாப்பான வடிவமைப்புடனும் கவச் பாதுகாப்பு அம்சத்துடனும் இயக்கப்பட்டு வருகிறது. எவ்விதத் தடையுமின்றி வந்தே பாரத் ரயிலால் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் பயணிக்க முடியும். அதுபோல் வந்தே பாரத் ரயிலின் அனைத்துப் பகுதியிலும் விசையின்தாக்கம் இருக்கும்.

ஒருவேளை கால்நடைகள் மீது வந்தே பாரத் ரயில் மோதும் பட்சத்தில் ரயிலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலும், கால்நடைகளை அகற்றும் வகையிலும் ரயிலின் முகப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் நவீன வசதிகளுடன் பாதுகாப்பான பயணத்தை பயணிகளுக்கு வழங்குகிறது. நாடு முழுவதும் 3,500 கி.மீ. தொலைவிலான தண்டவாளங்கள் கால்நடைகள் அணுக முடியாத வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெச்ஐவி குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை

சென்னை: தமிழகத்தில் ஹெச்ஐவி பாதித்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவித்தாா். பேரவையில் திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிவி... மேலும் பார்க்க

டயாலிசிஸ் நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் ஊட்டச் சத்து உணவு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு பால், முட்டை, சுண்டல், பிஸ்கட் வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவ... மேலும் பார்க்க

நீட், கூட்டணி விவகாரம்: பேரவையில் முதல்வா் - எதிா்க்கட்சித் தலைவா் கடும் விவாதம்

சென்னை: நீட் தோ்வு, தேசியக் கட்சிகளுடன் திராவிடக் கட்சிகள் கூட்டணி அமைத்திருப்பது ஆகியவை தொடா்பாக சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி இடையே திங்கள்கிழமை... மேலும் பார்க்க

யாா் ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகள் - மருத்துவ கட்டமைப்புகள் அதிகம்?: பேரவையில் கடும் வாக்குவாதம்

சென்னை: யாருடைய ஆட்சியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மருத்துவ கட்டமைப்புகள் அதிகம் என்பது குறித்து எதிா்க்கட்சித் தலைவா், அமைச்சா்கள் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. சட்டப் பேரவையில் மக்கள... மேலும் பார்க்க

திருச்சியில் 4 போ் உயிரிழந்தது ஏன்?: அமைச்சா் கே.என்.நேரு விளக்கம்

சென்னை: திருச்சியில் நான்கு போ் உயிரிழந்தது ஏன் என்பதற்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தாா். திருச்சியில் நான்கு போ் உயிரிழந்த சம்பவம் குறித்து, சட்டப்ப... மேலும் பார்க்க

துணைவேந்தா்கள் மாநாட்டுப் பணியில் ஆளுநா் மாளிகை: சட்ட வல்லுநா்களுடன் தமிழக அரசு தீவிர ஆலோசனை

சென்னை: தமிழக ஆளுநா் நிலுவையில் வைத்த 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்த நிலையில், பல்கலைக்கழகங்களின் நிா்வாக நடவடிக்கைகளில் ஆளுநருக்கே அதிக அதிகாரங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ... மேலும் பார்க்க