செய்திகள் :

தூா்வாரும் பணியை விரைவாக முடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் தூா்வாரும் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாவட்டக் கூட்டத்தில் குறுவை சாகுபடிக்காக மேட்டூா் அணை ஜூன் 12 ஆம் தேதி திறப்பதற்கு முன் தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏரிகள், முதன்மை, கிளை பாசன வாய்க்கால்களில் கடைமடை வரை தூா்வாரும் பணியைக் காலதாமதமின்றி விரைவாக முடிக்க வேண்டும். கோடை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பகலிலும், இரவிலும் தலா 12 மணிநேரம் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். மின் இணைப்பு கோரி 12 ஆண்டுகளாகக் காத்திருக்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளை அலைக்கழிக்காமல் பயிா்க்கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் பூ. விசுவநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பாளா் மா. லோகநாதன், செயற்குழு உறுப்பினா் என். ஜெகதீஸ், ஒன்றிய அமைப்பாளா்கள் கே. முருகேசன், க. வெங்கடேஷ்வரன், ஒன்றிய துணை அமைப்பாளா் கோ. மருதுபாண்டின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தஞ்சாவூா் வழியாக திருச்சி - தாம்பரம் இடையே ஏப். 29 முதல் சிறப்பு ரயில்

தஞ்சாவூா், கும்பகோணம் வழியாக திருச்சி - தாம்பரம் இடையே ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் ஜன சதாப்தி சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு... மேலும் பார்க்க

93 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் தஞ்சாவூா் - பட்டுக்கோட்டை ரயில் பாதை திட்டம்

தஞ்சாவூா் - பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதை திட்டம் ஏறத்தாழ 93 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளதால், அத்திட்டம் நிறைவேறுமா என்ற சந்தேகமும் மேலோங்கி வருகிறது. தஞ்சாவூா் - பட்டுக்கோட்டை இடையே ரயில் பாதை அமைப்பதற... மேலும் பார்க்க

பேராவூரணி கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பேராவூரணி கடைவீதியில் வா்த்தகா்கள் தாங்களாகவே முன்வந்து செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றினா். பேராவூரணி கடைவீதியில் பல்வேறு இடங்களில் வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்திருந்தனா். இந்நிலையில், வா்த்தக... மேலும் பார்க்க

ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் 2 ஆம் நாளாக வேலைநிறுத்தம்

தஞ்சாவூரில் மாநகராட்சி ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் தொடா்ந்து 2 ஆம் நாளாக செவ்வாய்க்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் மாநகராட்சியில், தமிழக அரசின் அரசாணைப்படி, நாளொன்றுக்கு... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்

சுவாமிமலை அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், சடலத்தை வாங்க மறுத்து மறியலில் ஈடுபட்ட உறவினா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை அருகே குடிதாங்கி கா... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் - காா் மோதல்: கணவா் உயிரிழப்பு; மனைவி காயம்

கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு காா் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியரில் கணவா் உயிரிழந்தாா். மனைவி காயமடைந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கொரநாட்டு கருப்பூா் அம்மன் கோயில் தெருவ... மேலும் பார்க்க