செய்திகள் :

செல்போன் பறிமுதல் செய்த ஆசிரியரைத் தாக்கிய மாணவி!

post image

ஆந்திரத்தில் செல்போனைப் பறிமுதல் செய்த பெண் ஆசிரியரை மாணவி ஒருவர் தனது காலணியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விசாகப்பட்டிண மாவட்டத்தில் பீமுனிப்பட்டிணம் பகுதியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், மாணவி ஒருவர் வளாகத்தினுள் தனது செல்போனைப் பயன்படுத்தியதால் கல்லூரி விதிமுறைகளை மீறியதாக அவரது செல்போனை அங்கு பணியாற்றும் பெண் ஆசிரியர் ஒருவர் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த அந்த மாணவி ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார், தனது செல்போனின் விலை ரூ.12,000 எனவும் அதனை உடனடியாகத் திருப்பி தரவில்லை என்றால் தனது காலணியைக் கொண்டு அடிப்பேன் என அவர் மிரட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஆசிரியருக்கும் மாணவிக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்ததால் அந்த மாணவி தனது காலணியால் ஆசிரியரைத் தாக்கியுள்ளார். பின்னர், உடனடியாக அங்கிருந்த மாணவர்களும் ஆசிரியர்களும் அந்த மாணவியை அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை அங்கிருந்தவர்கள் விடியோ பதிவு செய்துள்ளனர். இந்த விடியோ இணையத்தில் வெளியான நிலையில், கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மாணவிக்கு எதிராக அந்தக் கல்லூரியின் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:ஜம்மு - காஷ்மீர் தாக்குதல்: முதல்வர் கண்டனம்

சென்னையில் புதிதாக 3 பேருக்கு கரோனா!

சென்னையில் புதிதாக 3 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.சென்னையில் ஒரு பெண் உள்பட 3 பேருக்கு நேற்று (ஏப்.21) கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுக... மேலும் பார்க்க

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது: பிரதமர் கண்டனம்!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்தி... மேலும் பார்க்க

பிரான்ஸ் உள்துறை அமைச்சர் இந்தியா வருகை!

பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சர் அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறார். பிரான்ஸின் உள்துறை அமைச்சர் ஃபிரான்கோயிஸ் நோயல் பஃபெட் நாளை (ஏப்.23) அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகைத் தரவுள்ளதாக இந்தியா... மேலும் பார்க்க

ஆளுநருக்கு எதிராக ஏப். 25-ல் இந்திய கம்யூ. கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழக ஆளுநரின் அரசியல் சாசன விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து ஏப். 25 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கறுப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறி... மேலும் பார்க்க

ஜப்பானில் மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்வர்!

ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்திலுள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மரியாதை செலுத்தினார். தொழில் சார்ந்த முதலீட்டாளர்களை ஈர்க்க ஜப்பான் சென்றுள்ள தெலங்கானா முதல்வர் ரேவந்த் ர... மேலும் பார்க்க

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ. 2,000 ஊதிய உயர்வு!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ. 2,000 ஊதியம் உயர்த்தப்படுவதாக பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப... மேலும் பார்க்க