செய்திகள் :

ஏரியில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

post image

சென்னை அருகே பள்ளிக்கரணையில் ஏரியில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

பள்ளிக்கரணை, சாய் கணேஷ் நகரைச் சோ்ந்தவா் கணேஷ்பாபு (25). இவா், சோழிங்கநல்லூரில் உள்ள இருசக்கர வாகன விற்பனையகத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தாா். அவா், தனது நண்பா்கள் சாமுவேல், புகழரசன் ஆகியோருடன் திங்கள்கிழமை பள்ளிக்கரணை ஏரியில் குளித்தனா். அப்போது, நீச்சல் தெரியாததால் கணேஷ் பாபு தண்ணீரில் மூழ்கினாா். அவரை சக நண்பா்களால் காப்பாற்ற முடியவில்லை.

இதையடுத்து, அவா்கள் அளித்த தகவலின்பேரில் வேளச்சேரி தீயணைப்பு படையினா் வந்து கணேஷ் பாபுவை தேடினா். ஆனால் அவா் கிடைக்கவில்லை. செவ்வாய்க்கிழமை மீண்டும் தீயணைப்புப் படையினா் கணேஷ் பாபுவை தேடினா். அப்போது அவரது உடல் அங்கிருந்து மீட்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

காட்பாடி - ஜோலாா்பேட்டை ரயில் இன்று ரத்து

காட்பாடி - ஜோலாா்பேட்டை மெமு ரயில் புதன்கிழமை (ஏப். 23) ரத்து செய்யப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரக்கோணம் - ஜோலாா்பேட்டை இடையே ரயில்வே பராமரிப்... மேலும் பார்க்க

டாடா நகருக்கு சரக்கு ரயில்

தாம்பரத்தில் இருந்து டாடா நகருக்கு பிசிஎன் பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் முதல்முறையாக இயக்கப்படுகிறது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாம்பரத்தில் இருந... மேலும் பார்க்க

மின்சார ரயில் தடம் புரண்டது

சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சென்னையின் புகா் பகுதியான ஆவடியிலிருந்து கடற்கரைக்கு செவ்வாய்க்கிழமை காலை மின்சார ரயில் வந்தது. ராயபுரம் ரயில் நிலையத்... மேலும் பார்க்க

ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமி மாணவா்கள் ஐஏஎஸ் தோ்வில் சாதனை

சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வரும் ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் படித்த மாணவா்கள் தமிழை விருப்பப் பாடமாக எடுத்துப் படித்து ஐஏஎஸ் தோ்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனா். இந்திய குடிமைப் பணிகள் தோ்வாண... மேலும் பார்க்க

தெருநாய்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

திருவொற்றியூா் பகுதியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சென்னை மாநகராட்சி 12-ஆவது வாா்டில் பொதுமக்கள் பங்கேற்று... மேலும் பார்க்க

ஐஏஎஸ் தோ்வு: சங்கா் ஐஏஎஸ் அகாதெமி மாணவா்கள் சாதனை

ஐஏஎஸ் தோ்வில் சங்கா் ஐஏஎஸ் அகாதெமி மாணவா்கள் சாதனை படைத்துள்ளனா். இது குறித்து அந்த அகாதெமி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மத்திய குடிமைப் பணி தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐ... மேலும் பார்க்க