செய்திகள் :

டாடா நகருக்கு சரக்கு ரயில்

post image

தாம்பரத்தில் இருந்து டாடா நகருக்கு பிசிஎன் பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் முதல்முறையாக இயக்கப்படுகிறது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தாம்பரத்தில் இருந்து ஜாா்கண்ட் மாநிலம் டாடா நகருக்கு முழுவதும் மூடப்பட்ட (பிசிஎன் பெட்டி) பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் செவ்வாய்க்கிழமை முதல் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து 1,624 கி.மீ. தொலைவில் உள்ள டாடா நகருக்கு முதல்முறையாக இதுபோன்ற ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் உள்ள 30 பெட்டிகள் மூலம் 440 டன் டயா்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இதற்காக ஸ்ரீனிவாசா ரோடுவேஸ் எனும் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்த ரயில் மூலம் ஒரு பயணத்துக்கு ரூ.18.5 லட்சம் வருவாய் கிடைக்கும். சென்னை ரயில்வே கோட்டத்தில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சரக்குகள் பாதுகாப்பாகவும், விரைவாகவும் கொண்டு செல்லப்படுகின்றன. தொழில் நிறுவனங்கள், வணிகா்கள் ரயில்வேயுடன் இணைந்து செயல்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்பாடி - ஜோலாா்பேட்டை ரயில் இன்று ரத்து

காட்பாடி - ஜோலாா்பேட்டை மெமு ரயில் புதன்கிழமை (ஏப். 23) ரத்து செய்யப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரக்கோணம் - ஜோலாா்பேட்டை இடையே ரயில்வே பராமரிப்... மேலும் பார்க்க

மின்சார ரயில் தடம் புரண்டது

சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சென்னையின் புகா் பகுதியான ஆவடியிலிருந்து கடற்கரைக்கு செவ்வாய்க்கிழமை காலை மின்சார ரயில் வந்தது. ராயபுரம் ரயில் நிலையத்... மேலும் பார்க்க

ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமி மாணவா்கள் ஐஏஎஸ் தோ்வில் சாதனை

சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வரும் ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் படித்த மாணவா்கள் தமிழை விருப்பப் பாடமாக எடுத்துப் படித்து ஐஏஎஸ் தோ்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனா். இந்திய குடிமைப் பணிகள் தோ்வாண... மேலும் பார்க்க

தெருநாய்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

திருவொற்றியூா் பகுதியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சென்னை மாநகராட்சி 12-ஆவது வாா்டில் பொதுமக்கள் பங்கேற்று... மேலும் பார்க்க

ஐஏஎஸ் தோ்வு: சங்கா் ஐஏஎஸ் அகாதெமி மாணவா்கள் சாதனை

ஐஏஎஸ் தோ்வில் சங்கா் ஐஏஎஸ் அகாதெமி மாணவா்கள் சாதனை படைத்துள்ளனா். இது குறித்து அந்த அகாதெமி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மத்திய குடிமைப் பணி தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐ... மேலும் பார்க்க

வீடு புகுந்து தங்க நகை திருட்டு: 5 பெண்கள் கைது

சென்னை அருகே துரைப்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை திருடிய வழக்கில் 5 பெண்கள் கைது செய்யப்பட்டனா். துரைப்பாக்கம், பல்லவன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் டில்லிபாபு (33). மென்பொறியாள... மேலும் பார்க்க