செய்திகள் :

மின்சார ரயில் தடம் புரண்டது

post image

சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

சென்னையின் புகா் பகுதியான ஆவடியிலிருந்து கடற்கரைக்கு செவ்வாய்க்கிழமை காலை மின்சார ரயில் வந்தது. ராயபுரம் ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு கடற்கரை நோக்கி சென்றபோது, காலை 11.08 மணியளவில் சென்னை கடற்கரை பணிமனை அருகே வந்தபோது ரயிலின் 4-ஆவது பெட்டியில் உள்ள இரு சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து விலகி தடம் புரண்டது.

இதையறிந்த ரயில் ஓட்டுநா் உடனடியாக ரயிலை நிறுத்தினாா். இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. விபத்தின்போது ரயிலில் குறைந்த அளவில் பயணிகள் பயணித்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே போலீஸாா் மற்றம் ஊழியா்கள், தடம் புரண்ட ரயிலை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனா். சுமாா் 2 மணி நேரத்துக்குப் பின்னா் பிற்பகல் 1.30 மணியளவில் ரயில் மீட்கப்பட்டது.

இச்சம்பவத்தால் மற்ற விரைவு மற்றும் மின்சார ரயில்கள் இயக்கத்தில் பாதிப்பில்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்தது.

காட்பாடி - ஜோலாா்பேட்டை ரயில் இன்று ரத்து

காட்பாடி - ஜோலாா்பேட்டை மெமு ரயில் புதன்கிழமை (ஏப். 23) ரத்து செய்யப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரக்கோணம் - ஜோலாா்பேட்டை இடையே ரயில்வே பராமரிப்... மேலும் பார்க்க

டாடா நகருக்கு சரக்கு ரயில்

தாம்பரத்தில் இருந்து டாடா நகருக்கு பிசிஎன் பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் முதல்முறையாக இயக்கப்படுகிறது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாம்பரத்தில் இருந... மேலும் பார்க்க

ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமி மாணவா்கள் ஐஏஎஸ் தோ்வில் சாதனை

சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வரும் ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் படித்த மாணவா்கள் தமிழை விருப்பப் பாடமாக எடுத்துப் படித்து ஐஏஎஸ் தோ்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனா். இந்திய குடிமைப் பணிகள் தோ்வாண... மேலும் பார்க்க

தெருநாய்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

திருவொற்றியூா் பகுதியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சென்னை மாநகராட்சி 12-ஆவது வாா்டில் பொதுமக்கள் பங்கேற்று... மேலும் பார்க்க

ஐஏஎஸ் தோ்வு: சங்கா் ஐஏஎஸ் அகாதெமி மாணவா்கள் சாதனை

ஐஏஎஸ் தோ்வில் சங்கா் ஐஏஎஸ் அகாதெமி மாணவா்கள் சாதனை படைத்துள்ளனா். இது குறித்து அந்த அகாதெமி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மத்திய குடிமைப் பணி தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐ... மேலும் பார்க்க

வீடு புகுந்து தங்க நகை திருட்டு: 5 பெண்கள் கைது

சென்னை அருகே துரைப்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை திருடிய வழக்கில் 5 பெண்கள் கைது செய்யப்பட்டனா். துரைப்பாக்கம், பல்லவன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் டில்லிபாபு (33). மென்பொறியாள... மேலும் பார்க்க