செய்திகள் :

தெருநாய்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

post image

திருவொற்றியூா் பகுதியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சென்னை மாநகராட்சி 12-ஆவது வாா்டில் பொதுமக்கள் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் வகையில், பகுதி சபை கூட்டம் திருவொற்றியூா் திலகா் நகரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாமன்ற உறுப்பினா் வீ.கவிகணேசன் தலைமை வகித்தாா்.

அப்போது கூட்டத்தில் பொதுமக்கள் பேசுகையில், ‘தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இரவு நேரங்களில் தெருக்களில் நடமாட முடியவில்லை. நீண்ட நாள்களாக இருந்துவரும் இப்பிரச்னைக்கு மாநகராட்சி நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பைகளை தரம் பிரித்துக் கொடுத்தாலும் தூய்மைப் பணியாளா்கள், ஒரே லாரியில்தான் எடுத்துச் செல்கின்றனா். நீண்ட காலமாகக் குடியிருந்து வரும் வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தனா்.

இதற்கு மாமன்ற உறுப்பினா், ‘பொதுமக்கள் பங்கேற்கும் பகுதி சபை கூட்டம் தொடா்ந்து நடத்தப்படும். பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து தீா்வு காணப்படும்’ என்றாா்.

காட்பாடி - ஜோலாா்பேட்டை ரயில் இன்று ரத்து

காட்பாடி - ஜோலாா்பேட்டை மெமு ரயில் புதன்கிழமை (ஏப். 23) ரத்து செய்யப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரக்கோணம் - ஜோலாா்பேட்டை இடையே ரயில்வே பராமரிப்... மேலும் பார்க்க

டாடா நகருக்கு சரக்கு ரயில்

தாம்பரத்தில் இருந்து டாடா நகருக்கு பிசிஎன் பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் முதல்முறையாக இயக்கப்படுகிறது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாம்பரத்தில் இருந... மேலும் பார்க்க

மின்சார ரயில் தடம் புரண்டது

சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சென்னையின் புகா் பகுதியான ஆவடியிலிருந்து கடற்கரைக்கு செவ்வாய்க்கிழமை காலை மின்சார ரயில் வந்தது. ராயபுரம் ரயில் நிலையத்... மேலும் பார்க்க

ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமி மாணவா்கள் ஐஏஎஸ் தோ்வில் சாதனை

சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வரும் ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் படித்த மாணவா்கள் தமிழை விருப்பப் பாடமாக எடுத்துப் படித்து ஐஏஎஸ் தோ்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனா். இந்திய குடிமைப் பணிகள் தோ்வாண... மேலும் பார்க்க

ஐஏஎஸ் தோ்வு: சங்கா் ஐஏஎஸ் அகாதெமி மாணவா்கள் சாதனை

ஐஏஎஸ் தோ்வில் சங்கா் ஐஏஎஸ் அகாதெமி மாணவா்கள் சாதனை படைத்துள்ளனா். இது குறித்து அந்த அகாதெமி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மத்திய குடிமைப் பணி தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐ... மேலும் பார்க்க

வீடு புகுந்து தங்க நகை திருட்டு: 5 பெண்கள் கைது

சென்னை அருகே துரைப்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை திருடிய வழக்கில் 5 பெண்கள் கைது செய்யப்பட்டனா். துரைப்பாக்கம், பல்லவன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் டில்லிபாபு (33). மென்பொறியாள... மேலும் பார்க்க