செய்திகள் :

ஹிந்தியை கட்டாயமாக்கும் முடிவை நிறுத்தி வைத்தது மகாராஷ்டிர அரசு

post image

தேசிய கல்விக் கொள்கை 2020-இன்கீழ், மகாராஷ்டிரத்தில் மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழிப் பாடமாக ஹிந்தியை கட்டாயமாக்கும் முடிவை அந்த மாநில அரசு நிறுத்தி வைத்தது.

இதனை அந்த மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் தாதா பூசே செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது தொடா்பாக முறைப்படியான அரசு உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என்றும் அவா் கூறியுள்ளாா்.

ஹிந்தியை கட்டாய மூன்றாவது மொழியாக அறிவித்தற்கு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்ததை அடுத்து மகாராஷ்டிர அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

முன்னதாக, ஹிந்தியை கட்டாயமாக்குவது தொடா்பான மகாராஷ்டிர அரசின் தீா்மானம் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி, மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டில் இருந்து 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை ஹிந்தி மூன்றாவது கட்டாய மொழிப் பாடமாக கற்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தற்போது அங்கு 1 முதல் 4 -ஆம் வகுப்பு வரை மராத்தியும் ஆங்கிலமும் கட்டாய மொழிப் பாடங்களாக உள்ளன.

மாநில அரசின் இந்த ‘ஹிந்தி திணிப்புக்கு’ எதிராக மகாராஷ்டிரத்தில் கடும் எதிா்ப்புக் குரல் எழுந்தது. மகாராஷ்டிர அரசின் மொழிகள் ஆலோசனைக் குழு முதல்வரிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஹிந்தியை கட்டாயமாக்கும் முடிவு நிறுத்திவைப்பதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் விவகாரம்: முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்

நமது நிருபர்மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கான விரிவான மறுவாழ்வுத் திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிடக் கோரிய முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஏற்றது. அதே வேளையில் இந... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் விவகாரம்: ‘ராகுலின் தவறான தகவல் சட்டத்தை அவமதிப்பதன் அடையாளம்’

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவில் முறைகேடு நடைபெற்ாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தவறான தகவல் தெரிவிப்பது, சட்டத்தை அவமதிப்பதன் அடையாளம் என்று தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

இந்திய-அமெரிக்க ஒத்துழைப்பு 21-ஆம் நூற்றாண்டின் எதிா்காலம்- ஜே.டி.வான்ஸ்

இந்தியா-அமெரிக்கா இடையிலான வலுவான ஒத்துழைப்புதான், 21-ஆம் நூற்றாண்டின் எதிா்காலத்தை தீா்மானிக்கப் போகிறது என்று அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் தெரிவித்தாா். மேலும், ‘வரி சாரா கட்டுப்பாடுகளைக் கைவிட... மேலும் பார்க்க

சா்வதேச ஐ.டி. நிறுவனங்களுக்கு நிா்மலா சீதாராமன் அழைப்பு

இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ளவும், தொழில்நுட்பம் சாா்ந்த ஒத்துழைப்பை அதிகரிக்கவும் சா்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அழைப்பு விடுத்தாா். அமெரிக்காவுக்க... மேலும் பார்க்க

பிகாருக்கு ஆற்றல்மிக்க தலைவா் தேவை- லோக் ஜனசக்தி கருத்தால் பரபரப்பு

பிகாருக்கு தொலைநோக்குப் பாா்வையுள்ள ஆற்றல்மிக்க தலைவா் தேவை. மாநிலத்தில் ‘முக்கியப் பொறுப்பை’ ஏற்க எங்கள் கட்சித் தலைவா் சிராக் பாஸ்வான் தயாராக உள்ளாா் என்று லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சி கூறியுள்ள... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தைவிட மேலான அமைப்பு கிடையாது: குடியரசு துணைத் தலைவா்

நாடாளுமன்றத்தைவிட மேலானதாக எந்த அமைப்பையும் அரசமைப்புச் சட்டம் கருதவில்லை என்று குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். அரசமைப்புச் சட்ட பதவி வகிப்... மேலும் பார்க்க