செய்திகள் :

சௌதி அரேபியாவில் பிரதமர் மோடி! 21 குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு!

post image

சௌதி அரேபியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு 21 குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக சௌதி அரேபியாவுக்கு இன்று சென்றடைந்தார். கடந்த 40 ஆண்டுகளில் ஜெட்டா நகரத்துக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையையும் மோடி பெற்றுள்ளார். சௌதி அரேபியாவின் போர் விமானங்கள் பிரதமர் மோடியை அழைத்துச் சென்றன.

அவருக்கு 21 குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜெட்டா நகரத்துக்கு செல்வதற்கு முன்னதாக பிரதமர் மோடி பேசுகையில், “சௌதி அரேபியாவுடனான வரலாற்று உறவுகளை இந்தியா மதிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பெற்றுள்ளன” என்றார்.

இதையும் படிக்க: யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியானது!

இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம், ஹஜ் யாத்திரையில் இந்திய பக்தர்களுக்கான விசா ஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடி கலந்தாலோசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2016 ஆம் ஆண்டில் சௌதி அரேபியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருதைப் பெற்ற பிரதமர் மோடி, இந்தியத் தொழிலாளர்கள் பணியாற்றும் தொழிற்சாலையைப் பார்வையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியர்களின் 2-வது வீடு என்றழைக்கப்படும் சௌதி அரேபியாவில் 27 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த பத்தாண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி, சௌதி அரேபியாவுக்கு செல்வது இது மூன்றாவது முறையாகும். இருப்பினும், ஜெட்டா நகரத்துக்கு செல்வது இதுவே முதல் முறை. 2023 ஆம் ஆண்டு சௌதி இளவரசர் முகமது பின் சல்மான் அரசுமுறை பயணமாக இந்தியா வந்ததைத் தொடர்ந்து பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதையும் படிக்க: தங்கம் விலை முதல்முறையாக ரூ.1 லட்சத்தை தொட்டது!

'நாடாளுமன்றத்தைத் தாண்டி எந்த அதிகாரமும் இல்லை' - உச்ச நீதிமன்றம் குறித்து ஜகதீப் தன்கர் மீண்டும் பேச்சு!

அரசியலமைப்பில் நாடாளுமன்றம்தான் உச்சபட்ச அதிகாரம் என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கூறியுள்ளார். மசோதாக்களை நிறுத்திவைத்ததாகக் கூறி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வ... மேலும் பார்க்க

நிஞ்சா 650 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது கவாஸகி!

நிஞ்சா 650 பைக்கை இந்தியாவில் கவாஸகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.ரேஸ் வாகனங்களுக்கு புகழ்பெற்ற கவாஸகி நிறுவனம் நிஞ்சா 650 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் விலை ரூ.7.27 லட்சமாக ... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர் தாக்குதல்: அமித் ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

ஜம்மு - காஷ்மீர் தாக்குதல் குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார். ஜம்மு- காஷ்மீரின் பஹால்காம் பகுதியில் பைசரன் எனும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளத... மேலும் பார்க்க

குஜராத் குடியிருப்புப் பகுதியில் விழுந்த பயிற்சி விமானம்!

குஜராத்தில் குடியிருப்புப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது. இதில், விமானி சம்பவ இடத்திலேயே பலியானார்.அம்ரேலி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட தனியார் பயிற்சி நிறுவனத்... மேலும் பார்க்க

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியானது!

2024 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் ஐஆா்எஸ் உள்ளிட்ட 24 வகையான குடிமைப் பணிகளுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபி... மேலும் பார்க்க

தங்கம் விலை முதல்முறையாக ரூ.1 லட்சத்தை தொட்டது!

மும்பை: 10 கிராம் தங்கத்தின் விலை சில்லறை சந்தையில் முதல்முறையாக ரூ. 1 லட்சத்தைக் கடந்து விற்பனையாகிறது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கை மற்றும் பொருளாதார கொள்கை மாற்றங்களால... மேலும் பார்க்க