செய்திகள் :

பள்ளிச் சீருடை: `மாணவிக்கு அளவெடுக்க ஆண் டெய்லர்' கட்டாயப்படுத்திய ஆசிரியை - போக்சோவில் வழக்கு பதிவு

post image

பள்ளிச் சீருடை தைப்பதற்கு ஆண் டெய்லர்கள் மூலம் அளவெடுக்க கட்டாயப்படுத்தியதாக மாணவி அளித்த புகாரில் ஆசிரியை மீதும் ஆண், பெண் என இரு டெய்லர்கள் மீதும் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போக்சோ வழக்கு

மதுரையின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள மெட்ரிகுலேசன் பள்ளியில் மாணவிகளுக்கான சீருடை தைப்பதற்கு அளவெடுக்க இன்று டெய்லர்களை அழைத்து வந்துள்ளனர். ஒரு பெண் டெய்லருடன், ஆண் டெய்லரும் அளவெடுதத்தை பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் எதிர்த்துள்ளார்.

ஆனால், பள்ளி ஆசிரியை அந்த மாணவி உள்ளிட்ட அனைத்து மாணவிகளையும் கட்டாயப்படுத்தி அளவு எடுக்க வைத்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் பாதிப்படைந்த அம்மாணவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, விசாரணை நடத்திய போலீசார், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியையுடன் டெய்லர் மீதும் போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஆசிரியை மற்றும் ஆண் மற்றும் பெண் டெய்லரை கைது செய்ய வேண்டும் எனவும், இனி ஆண் டெய்லர்கள் மாணவிகளுக்கு சீருடை அளவீடு செய்யும் பணிக்கு பயன்படுத்தக் கூடாது எனக்கூறி இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் மாதர் சங்கத்தினர் அந்த தனியார் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்சோ
போக்சோ

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்றபோது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்பு அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`பாலியல் வன்கொடுமை முயற்சி' - ஓடும் ரயிலிலிருந்து குதித்த இளம் பெண்! - என்ன நடந்தது?

ஹைதராபாத்தில் பாலியல் சீண்டலுக்கு ஆளான 23 வயது பெண் ஒருவர் ஓடும் ரயிலிலிருந்து குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உணவு டெலிவரி செய்யும் வேலை செய்யும் 23 வயதுப் பெண் ஒருவர் தன்னுடைய பழு... மேலும் பார்க்க

இன்ஸ்டா நண்பனை சந்திக்க வீட்டை விட்டுச் சென்ற மாணவிகள்... வக்கீல் உள்பட 2 பேர் போக்ஸோவில் கைது

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி மற்றும் அவரது தங்கையான 6-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஆகியோர் கடந்த 13-ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறினர். அவர்களை கண்டுபிடித்து... மேலும் பார்க்க

``5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை” - போக்சோவில் இருவர் கைது!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணம் காவல் சரகத்திற்கு உள்பட்ட, ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவி, வயது 10. இந்த மாணவி பள்ளியில் அடிக்கடி சோர்வாக இருந்துள்ளார். இதை... மேலும் பார்க்க

கோவை: போதைப் பழக்கம், பாலியல் அத்துமீறல், வழிப்பறி... பதற வைக்கும் கல்லூரி மாணவர்கள்.. தீர்வு என்ன?

கோவையில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டர், சிறு குறு நிறுவனங்களில் இதயம் என்று தொழில் நகரமாக மிளிர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக ஏராளமான கல்வி நிறுவனங்களின் ... மேலும் பார்க்க